கோவை துடியலூரில் பாஜக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

கோவை துடியலூரை அடுத்த வடமதுரையில் பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றியம் வர்த்தக அணி சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் சிவகுமார், மண்டல தலைவர் வசந்தகுமார் ஆகியோர் தலைமை தாங்கினர்.



கோவை: துடியலூர் பகுதியில் பாஜக சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.



கோவை துடியலூரை அடுத்த வடமதுரை பேருந்து நிறுத்தம் பகுதியில் பாஜக பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றியம் வர்த்தக அணி சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் சிவகுமார், மண்டல தலைவர் வசந்தகுமார் ஆகியோர் தலைமை தாங்கினர்.

குருடம்பாளையம் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் சுரேஷ் குமார் மற்றும் சாவித்திரி சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



இந்த நீர்மோர் பந்தல் தினமும் காலை 8 மணியிலிருந்து மாலை 4 மணி வரை இருக்கும்.

இதுகுறித்து பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் கூறும்போது, இந்த வருடம் வெயில் அதிகமாக உள்ளது. மேலும் 4 டிகிரி வரை வெப்பம் உயர்ந்துள்ளதாக வானிலை துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் மிகவும் பயன்படும் வகையில் நீர்மோர் பந்தலை பாரதிய ஜனதா கட்சியினர் திறந்துள்ளதாகத் தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட, ஒன்றிய, பகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பேரணியில் வந்தனர். தொடர்ந்து அவர்கள் அனைவரும் நீர்மோர் பந்தலில் மோர் குடித்து தங்கள் தாகத்தை தீர்த்துக்கொண்டனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...