வால்பாறையில் 108 ஆம்புலன்ஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - ஓட்டுநர், நோயாளி பலி

கோவை மாவட்டம் வால்பாறையில் 108 ஆம்புலன்ஸ் வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், ஓட்டுநர் காளிதாஸ் மற்றும் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நோயாளி சிவகுமார் இருவரும் உயிரிழந்தனர்.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் அரசு மருத்துவமனைக்கு பாரளை எஸ்டேட் பகுதியில் இருந்து சிவகுமார் என்பவரை சிகிச்சைக்காக 108 வாகனத்தின் மூலம் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

மருத்துவமனை சாலை பகுதியில் வாகனத்தை நிறுத்திவிட்டு நோயாளியை அழைத்து செல்ல வாகனத்தின் பின்புறம் கதவை திறக்க ஓட்டுநர் காளிதாஸ் இறங்கி உள்ளார். அப்போது, வாகனம் பிரேக் பிடிக்காமல் பின்புறமாக வந்து பள்ளத்தில் விழுந்து விபக்குள்ளானது.



இதில், ஓட்டுநர் காளிதாஸ் மேல் ஆம்புலன்ஸ் வாகனம் ஏறி இறங்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.



நோயாளி சிவக்குமார் வாகனத்தின் அடியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.



நோயாளி சிவக்குமாரின் மனைவி சாந்திக்கு பலத்த காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 108 ஆம்புலன்ஸ் வாகனம் விபத்துக்குள்ளாகி 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...