உடுமலை அமராவதி அணையை தூர்வாருவதில் நடப்பாண்டிலும் சிக்கல் - அதிகாரிகள் தகவல்!

உடுமலையில் உள்ள அமராவதி அணை கடந்த 64 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளதால், மொத்த கொள்ளளவில் 15 - 20 சதவீதம் மணல் மற்றும் வண்டல் மண் தேங்கியுள்ளது. 54 அடிக்கும் மேல் தண்ணீர் இருப்பு காரணமாக இந்தாண்டும் தூர்வாருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


திருப்பூர்: உடுமலை அமராவதி அணையில் நீர் மட்டம் அதிகரிப்பின் காரணமாக இந்தாண்டும் தூர்வாரும் பணி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி அணை 1958 ஆம் ஆண்டு கட்டப்பட்டு 1959 ஆம் ஆண்டு மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. அமராவதி அணையானது, 4 டி.எம்.சி. கொள்ளளவும், ஆண்டுக்கு 10 டி.எம்.சி நீர் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.



இந்த அணையின் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டத்தில் உள்ள 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. பழைய ஆயக்கட்டு பாசனத்தில் மூன்று போகமும் நெல் சாகுபடியும், புதிய ஆயகட்டு பாசன நிலத்தில் கரும்பு, தென்னை, காய்கறி, தானிய வகை பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன .

இந்நிலையில், அமராவதி அணை கடந்த 64 ஆண்டுகளாக தூர்வாரப்படாததால் மொத்த நீர் தேங்கும் பரப்பில் 15 முதல் 20 சதவீதம் வரை மணல் மற்றும் வண்டல் மண் தேங்கியுள்ளது. இவற்றை முறையாக அகற்றி தூர் வாரினால் 800 மில்லியன் கன அடி நீர் திறக்க முடியும்.

மழைக்காலங்களில் கிடைக்கும் நீரை பாசன நிலங்களுக்கு கூடுதலாக வழங்கவும் அணையை தூர்வார வேண்டும் என விவசாயிகள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனர். சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழக பட்ஜெட்டில் அமராவதி அணை தூர்வாரப்பட்டு பழைய கொள்ளளவு நிலைக்கு கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டது.

அணை தூர்வாரப்பட்டால் எடுக்கப்படும் மணல் வண்டல் மண் வாயிலாக அரசுக்கு வருவாய் கிடைக்கும். விளை நிலங்களில் மண்வளம் பெருகும். கடந்த மூன்று ஆண்டுகளாக பருவமழைகள் திருப்தியாக பெய்து அணை நீர்மட்டம் குறையாத காரணத்தால் தூர்வாரப்படவில்லை.

தற்சமயம் அமராவதி அணை மொத்த 90 அடியில் 54.50 அடி தண்ணீர் நிரம்பி உள்ளது. இதனால் நடப்பு ஆண்டும் தூர்வாரும் பணிக்கு வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில்,

ஒவ்வொரு ஆண்டும் திட்ட அறிக்கை தயாரித்து அனுப்பி வைக்கப்படுகின்றது. 25 அடிக்கும் குறைவாக ஏப்ரல் மாதத்தில் நீர் இருப்பு இருந்தால் மட்டும் தூர்வார முடியும். நிதி தயாராக இருந்தாலும் நீர் இருக்கும் உள்ளதால் இப்பணி துவங்க முடியவில்லை, என்றனர்.

Newsletter

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...

கோவையில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக கருதப்பட்ட புகைப்படக் கலைஞர் வழக்கில் அதிர்ச்சி திருப்பம்; திட்டமிட்டு கொலை செய்ததாக 2 பேர் நீதிமன்றத்தில் சரண்

கோவை தடாகம் அருகே காணாமல் போன புகைப்படக் கலைஞர் பிரவீன், ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக முதலில் கருதப்பட்ட நிலையில், அவரை...

வடவள்ளியில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 40-ல் உள்ள வடவள்ளி பகுதியில் அனுமதியின்றி விளம்பர போஸ்டர்கள் ஒட்டிய தனியா...

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...