கோவையில் தனியார் கல்லூரியால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நீர்வழித்தடத்தை மீட்டுத்தரக் கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு


கோவை மாவட்டம், கரட்டுமேடு பகுதியை அடுத்த வழியாம்பாளையம் பகுதியில் எஸ்.என்.எஸ் என்ற பெயரில் தனியார் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது.

இந்த கல்லூரியின் வளாகத்தையொட்டி விவசாயத்துக்கு தேவையான தண்ணீரை கொண்டு செல்லும் நீர்வழித் தடம் உள்ளது. மழைக் காலங்களில் ஊருக்குள் இருந்து மழை நீரானது இந்த ஓடை வழியாக விவசாய நிலத்துக்குள் பாய்ந்து வரும். இந்த நீரை நம்பி அந்த பகுதியில் வாழை, சோளம் உள்ளிட்ட பயிர்கள் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.



ஆனால், தற்போது இந்த ஓடையை தனியார் கல்லூரி நிர்வாகம் ஆக்கிரமித்துள்ளதுடன், மற்றொரு பகுதி வழியாக கழிவு நீரையும் வெளியேற்றி வருகிறது. மேலும், கல்லூரியின் வெளிப்பகுதியில் நீர் வழித் தடத்தை மூடும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து எஸ்என்எஸ் கல்லூரி நிர்வாகத்தின் இத்தகைய செயல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், நீர் வழித்தடத்தை மாவட்ட நிர்வாகம் மீட்டுத்தரக் கோரி, அப்பகுதி பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இந்த ஓடை தடுக்கப்பட்டால் மழைக் காலத்தில் நீர் வெளியேறாமல் குடியுருப்பு பகுதிக்குள் தண்ணீர்புகும் நிலை ஏற்படும் எனவும், இதனால் இதனை தடுத்து நிறுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அம்மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...