12 மணி நேர வேலை சட்டத்தை திரும்ப பெறுக.! - கோவையில் ஏ.ஐ.டி.யூ.சி பொதுச்செயலாளர் அமர்ஜித் கவுர் வலியுறுத்தல்!

கோவை ஜீவா இல்லத்தில், ஏ.ஐ.டி.யூ.சி பொது செயலாளர் அமர்ஜித் கவுர் செய்தியாளர்களிடம் பேசியபோது, தமிழக அரசு கொண்டு வந்த 12 மணி நேர வேலை திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், இந்த சட்டத்தை கண்டித்து ஏ.ஐ.டி.யு.சி, தொடர்ந்து போராட்டம் நடத்தும் என்றார்.


கோவை: தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தியதை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என ஏஐடியூசி அகில இந்திய பொதுசெயலாளர் அமர்ஜித் கவுர் வலியுறுத்தியுள்ளார்.

கோவை ஜீவா இல்லத்தில் ஏ.ஐ.டி.யூ.சி. அகில இந்திய பொதுச்செயலாளரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளருமான அமர்ஜித் கவுர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,

மோடி ஆட்சியில் சமத்துவமின்மை அதிகரித்து வருகிறது.ஏழை மக்கள் தான் மொத்த சதவீதத்தில் 64.5% ஜி.எஸ்.டி., செலுத்துகின்றனர். அரசு வரி செலுத்துவோர் என சொல்லும் உயர் வகுப்பை சேர்ந்தவர்கள் 3% தான் ஜி.எஸ்.டி., செலுத்துகின்றனர். மோடி ஆட்சியில் நாடாளுமன்றமே அச்சுறுத்தலில் உள்ளது.

தொழிற்சாலை சட்டத்தை கர்நாடகாவில் ஆதரித்த பாஜக, தமிழகத்தில் எதிர்க்கிறார்கள். ஆனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரு மாநிலங்களிலும் இந்த சட்டத்தை எதிர்ப்பதாகவும் தொடர்ந்து இந்த சட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எதிர்க்கும்.

தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தியதை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும். ஏ.ஐ.டி.யு.சி, தொடர்ந்து இந்த சட்டத்தை கண்டித்து போராட்டம் நடத்தும்.தொழிலாளர்கள் பக்கமே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், ஏ.ஐ.டி.யு.சி யும் நிற்கும்.

மத்திய அரசின் அழுத்தம் காரணமாக தொழிற்சாலை சட்டம் நிறைவேற்றப்பட்டதா என்ற கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் தான் பதில் சொல்ல வேண்டும். அதுபோன்ற அழுத்தம் இருந்தாலும், ஸ்டாலின் தனது மக்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் பக்கம் தான் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...