ஊத்துக்குளி அருகே தாய், தந்தையை அடித்து கொலை செய்த மகன் - பரபரப்பு!

ஊத்துக்குளி அருகே கிருஷ்ணமூர்த்தி - ரேணுகாதேவி தம்பதியின் மகன் கார்த்தி, நேற்றிரவு தனது தாய், தந்தையை இரும்பு குழாயால் அடித்து கொலை செய்த நிலையில், போலீசார் நடத்திய விசாரணையில் குற்றவாளியான கார்த்தி மனநிலை பாதிக்கப்பட்டவர் என தெரியவந்துள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே தாய், தந்தையை மகனே அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பகுதியை சேர்ந்தவர்கள் கிருஷ்ணமூர்த்தி - ரேணுகாதேவி தம்பதி. இவர்களுக்கு 21 வயதில் கார்த்திக் என்ற மகன் உள்ளார். கார்த்திக் ஜெ.சி.பி ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.



இந்நிலையில் இன்று காலை கிணற்றுக்குள் இருந்து கார்த்தி கூச்சல் சத்தம் கேட்டுள்ளது. அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்தபோது, நள்ளிரவில் மர்ம நபர்கள் சிலர் தனது தாய் மற்றும் தந்தையை தாக்கிவிட்டு ஜே.சி.பி பேட்டரிகளை திருட முயன்றதாகவும், அதனை தடுக்க முயன்ற தன்னை, கிணற்றுக்குள் தள்ளி விட்டு சென்றதாக கூறியுள்ளார்.



இதனையடுத்து, வீட்டிற்கு சென்று பார்த்தபோது ரேணுகாதேவி பலத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையிலும், கிருஷ்ணமூர்த்தி படுகாயங்களுடன் இருந்துள்ளனர். பின்னர் உடனடியாக கிருஷ்ணமூர்த்தி மற்றும் கார்த்திக் இருவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அவர், மேல் சிகிச்சைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தொடர்ந்து ஊத்துக்குளி காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் கார்த்தி மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதும், அவரே இரும்பு குழாயால் தனது தாய், தந்தையை அடித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மனநிலை பாதிக்கப்பட்ட மகன், தாய், தந்தை இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் தொடரும் கொலை சம்பவங்கள்: ஆலாந்துறையில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக்கொலை

கோவை ஆலாந்துறையில் நாகராஜ் (60) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரை போ...

இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...