ஊத்துக்குளி அருகே தாய், தந்தையை அடித்து கொலை செய்த மகன் - பரபரப்பு!

ஊத்துக்குளி அருகே கிருஷ்ணமூர்த்தி - ரேணுகாதேவி தம்பதியின் மகன் கார்த்தி, நேற்றிரவு தனது தாய், தந்தையை இரும்பு குழாயால் அடித்து கொலை செய்த நிலையில், போலீசார் நடத்திய விசாரணையில் குற்றவாளியான கார்த்தி மனநிலை பாதிக்கப்பட்டவர் என தெரியவந்துள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே தாய், தந்தையை மகனே அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பகுதியை சேர்ந்தவர்கள் கிருஷ்ணமூர்த்தி - ரேணுகாதேவி தம்பதி. இவர்களுக்கு 21 வயதில் கார்த்திக் என்ற மகன் உள்ளார். கார்த்திக் ஜெ.சி.பி ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.



இந்நிலையில் இன்று காலை கிணற்றுக்குள் இருந்து கார்த்தி கூச்சல் சத்தம் கேட்டுள்ளது. அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்தபோது, நள்ளிரவில் மர்ம நபர்கள் சிலர் தனது தாய் மற்றும் தந்தையை தாக்கிவிட்டு ஜே.சி.பி பேட்டரிகளை திருட முயன்றதாகவும், அதனை தடுக்க முயன்ற தன்னை, கிணற்றுக்குள் தள்ளி விட்டு சென்றதாக கூறியுள்ளார்.



இதனையடுத்து, வீட்டிற்கு சென்று பார்த்தபோது ரேணுகாதேவி பலத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையிலும், கிருஷ்ணமூர்த்தி படுகாயங்களுடன் இருந்துள்ளனர். பின்னர் உடனடியாக கிருஷ்ணமூர்த்தி மற்றும் கார்த்திக் இருவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அவர், மேல் சிகிச்சைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தொடர்ந்து ஊத்துக்குளி காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் கார்த்தி மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதும், அவரே இரும்பு குழாயால் தனது தாய், தந்தையை அடித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மனநிலை பாதிக்கப்பட்ட மகன், தாய், தந்தை இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...