கோவை மாநகர பெண் காவலர்களுக்கான கைப்பந்து மற்றும் கபடி போட்டி - மாநகர காவல் ஆணையர் துவங்கி வைத்தார்!

தமிழ்நாடு காவல்துறையில் பெண்கள் காவலர்களாக பணியில் சேர்ந்து, 50 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி கோவை மாநகர காவல்துறை சார்பில் பெண் காவலர்களுக்கான கைப்பந்து மற்றும் கபடி போட்டிகளை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.


கோவை: கோவை மாநகர காவல்துறை சார்பில் பெண் காவலர்களுக்கான கைப்பந்து மற்றும் கபடி போட்டிகள் நடைபெற்றது.

காவல்துறையில் பெண்கள் காவலர்களாக சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவானதை ஒட்டி கோவை மாநகரில் பெண் காவலர்களுக்கு பல்வேறு போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.



இந்நிலையில், கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் அறிவுறுத்தலின் படி பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று மாநகர பெண் காவலர்களுக்கான கைப்பந்து மற்றும் கபடி போட்டிகள் நடைபெற்றது.



இதில் ஆய்வாளர் தெய்வமணி தலைமையில் Thunder Girls என்ற அணியும், ஆய்வாளர் தெளலத் நிஷா தலைமையில் Fire என்ற அணியும் மோதின. இதனை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். இந்த போட்டிகள் ஆயுதப்படை உதவி ஆணையாளர் சேகர் மேற்பார்வையில் நடைபெற்றது.



இதில் மாநகர காவல் தலைமை அலுவலக ஆணையாளர் சுகாசினி உட்பட பல்வேறு காவலர்கள் பங்கேற்று விளையாட்டை கண்டுகளித்தனர்.

Newsletter

இதர பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு மத்திய அரசு கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் மாணவர்களுக்கு மத்திய அரசின் PM...

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (02.09.2026) மின்தடை

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 2ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் K ரங்கநாயகி ராமச்சந்தி...

காய்ச்சல் பாதிப்பை தடுக்க கோவை மாநகராட்சி புதிய நடவடிக்கை: 24 மணி நேர மையம் தொடக்கம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 24 மணி நேர காய்ச்சல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் துவக்கப்பட்டுள்ளது. காய்ச்ச...

Facing Civic Issues in Your Ward? Submit Your Petition at Mayor’s Grievance Meet Tomorrow

Residents are invited to take part in the Corporation’s weekly Grievance Meeting and submit petitions regarding roads, s...

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...