என்னங்க இது, பத்து ரூபாய்   நாணயங்களுக்கு  வந்த சோதனை.!

கள்ளப்பணத்தையும் கருப்பு பணத்தையும் ஒழிக்க பழைய ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை கடந்த நவம்பர் மாதம் 8-ம் தேதி மத்திய அரசு வெளியிட்டது. இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையை தொடர்ந்து நாட்டு மக்களின் தோள்களை பல்வேறு துயரங்கள் தொற்றிக்கொண்டது. அந்த நேரத்தில் சமூக வலைத்தளங்களை  உபயோகிக்கும் ஒவ்வொருவரும் தங்களை ஒரு ஆட்சியாளர் என கருதிக்கொண்டு, இயன்றவரை வதந்திகளை கொளுத்திப்போட்டனர்.

'புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளில் ஜி.பி.எஸ். சிப் வைக்கப்பட்டுள்ளது, எங்கு ஒளித்து வைத்தாலும் எளிதில் கண்டுபிடித்துவிடலாம். விரைவில் புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அரசு அறிவிக்கப்போகிறது.' இது போன்று பல போலி அறிவிப்புகள் சமூக  வலைத்தளங்கள் மூலமாக நமக்கு  வந்திருக்கும். அதே நவம்பர் மாதத்தில் தான், 'புதிய பத்து ரூபாய் நாணயங்கள் செல்லாது' என்ற வதந்தியை நெட்டிசன்கள் கிளம்பிவிட்டனர். மேலும், பத்து ரூபாய் நாணயங்களில் அச்சிடப்பட்டிருக்கும் கோடுகளை வைத்து அது உண்மையானதா? அல்லது போலியா? என்று கண்டுபிடிக்கலாம் என்றும் தங்கள் கற்பனை திறனை கசக்கி வதந்திகளை அல்லி வீசினர். 

இதன் வெளிப்பாடாக, அந்த நாணயங்களில் அச்சிடப்பட்ட கோடுகளை தங்கள்  பொழப்பை கெடுத்து எண்ணும் வேளையில் இறங்கினர் வியாபாரிகள். பெரும்பாலும் சில்லறை வணிகங்களுக்கே பத்து ரூபாய் நாணயங்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வதந்தியை தொடர்ந்து, மளிகை கடைகள்  தொடங்கி, பெட்டிக்கடைகள்  வரையிலும் அந்த நாணயங்களுக்கு கடும் எதிர்ப்பு வந்தது. வாடிக்கையாளர்கள் கொண்டுவரும் நாணயங்களை 'டிடெக்ட்டிவ் ஆபீசர்' போல் ஆராய்ந்து பின்னார் அதை ரிஜெக்ட் செய்தனர் வியாபாரிகள். 

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அடுத்த ஒரு சில நாட்களில் ரிசர்வ் வங்கி அறிவிப்பு ஒன்றை  வெளியிட்டது. அதில், 'பத்து ரூபாய் நாணயங்கள் செல்லாது என்று சமூக வலைத்தளங்களில் பரவும் செய்தி போலியானது, தவறான செய்திகளை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டு இருந்துது. 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதை அறியாத மக்கள்  பலர் பத்து ரூபாய் நாணயங்களை  வாங்க மறுப்பு தெரிவித்து வருகின்றனர். மக்கள் யாரும் அந்த நாணயங்களை வாகன மறுக்கும் நிலையில்  சிறு வணிகர்கள் பலர் பத்து ரூபாய் நாணயங்களை வாங்குவதை முற்றுலுமாக நிறுத்திவிட்டனர்.  இந்த நிலை இன்று வரையில் நீடிக்கிறது. செல்லுமா? செல்லாதா? என்று சந்தேகிக்கும் பொது மக்கள் பத்து ரூபாய்க்கான வங்கிக்கு செல்வதா என்று ஏளனம் செய்துவிட புழக்கத்தில்  இருக்க வேண்டிய நாணயங்கள் கோவில் தெப்பக்குளங்களில் நீராடி வருகின்றன. 

பத்து ரூபாய் நாணயங்களும் ஏற்பட்டுள்ள சோதனையை முறையான அறிவிப்பின் மூலம்  அரசு சரி செய்து விட முடியும் என்று சமூக ஆர்வலர்கள்  தெரிவித்துள்ளனர்.     

Newsletter

திருப்பூரில் டியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போல...

மின்கம்பி விழுந்து சோலார் மின்வேலியில் மின்சாரம் பாய்ந்து பெண் விவசாயி பரிதாபமாக உயிரிழப்பு

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் நாயக்கன்பாளையம் ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் அறுந்து விழுந்த மின்கம்பி சோலார்...

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...