விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக்கு வருவாய் கோட்டாட்சியர் அரசு சார்பில் நேரில் சென்று மரியாதை செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.


கோவை: கோவை மாவட்டம், கோவை வடக்கு வட்டம், நரசிம்மநாயக்கன்பாளையம் கிராமம், ஸ்ரீ பாலாஜி நகர் பகுதியைச் சேர்ந்த சங்கீத் (19), தந்தை ராஜ்குமார் என்பவரின் மகன். இவர் எஸ்.என்.எஸ் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

கடந்த 15.05.2026 அன்று இரவு 11.30 மணியளவில் குருடம்பாளையம் கிராமம், தொப்பம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற போது விபத்தில் சிக்கியுள்ளார். படுகாயமடைந்த அவர் உடனடியாக கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் சங்கீத் மூளைச்சாவு அடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், இன்று மாலை அவர் உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து, சங்கீதின் குடும்பத்தினர் மனிதநேய அடிப்படையில் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கோயம்புத்தூர் வடக்கு வருவாய் கோட்டாட்சியர் அரசு சார்பில் நேரில் சென்று மரியாதை செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...