விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக்கு வருவாய் கோட்டாட்சியர் அரசு சார்பில் நேரில் சென்று மரியாதை செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.


கோவை: கோவை மாவட்டம், கோவை வடக்கு வட்டம், நரசிம்மநாயக்கன்பாளையம் கிராமம், ஸ்ரீ பாலாஜி நகர் பகுதியைச் சேர்ந்த சங்கீத் (19), தந்தை ராஜ்குமார் என்பவரின் மகன். இவர் எஸ்.என்.எஸ் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

கடந்த 15.05.2026 அன்று இரவு 11.30 மணியளவில் குருடம்பாளையம் கிராமம், தொப்பம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற போது விபத்தில் சிக்கியுள்ளார். படுகாயமடைந்த அவர் உடனடியாக கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் சங்கீத் மூளைச்சாவு அடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், இன்று மாலை அவர் உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து, சங்கீதின் குடும்பத்தினர் மனிதநேய அடிப்படையில் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கோயம்புத்தூர் வடக்கு வருவாய் கோட்டாட்சியர் அரசு சார்பில் நேரில் சென்று மரியாதை செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...