12 மணி நேர வேலை சட்ட நகலை எரித்து திருப்பூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் போராட்டம்!

தமிழக அரசின் 12 மணி நேர வேலை சட்ட திருத்தத்தை கண்டித்து, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், தமிழக அரசின் சட்டத்திருத்த மசோதாவின் நகலை எரித்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர்.



திருப்பூர்: தமிழக அரசின் 12 மணி நேர வேலை சட்ட திருத்தத்திற்கு எதிராக திருப்பூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மசோதா நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த 21ஆம் தேதி அன்று, 8 மணி நேர வேலை என்பதை 12 மணி நேரமாக மாற்றும் சட்டத் திருத்த மசோதாவை தமிழக அரசு கொண்டு வந்தது . இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் தொழிற்சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.



இந்த நிலையில் தமிழக அரசு உடனடியாக இந்த சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், மாநில செயலாளர் சிங்காரவேலன் தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தமிழக அரசின் தொழிலாளர் சட்ட திருத்த மசோதா நகலை எரித்து தங்களை எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.



இதன் காரணமாக திருப்பூர் பல்லடம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

Newsletter

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...

கோவையில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக கருதப்பட்ட புகைப்படக் கலைஞர் வழக்கில் அதிர்ச்சி திருப்பம்; திட்டமிட்டு கொலை செய்ததாக 2 பேர் நீதிமன்றத்தில் சரண்

கோவை தடாகம் அருகே காணாமல் போன புகைப்படக் கலைஞர் பிரவீன், ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக முதலில் கருதப்பட்ட நிலையில், அவரை...

வடவள்ளியில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 40-ல் உள்ள வடவள்ளி பகுதியில் அனுமதியின்றி விளம்பர போஸ்டர்கள் ஒட்டிய தனியா...

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...