வால்பாறை கூலாங்கல் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு - தண்ணீரில் சிக்கியவர்கள் மீட்பு

வால்பாறை அருகே கூலாங்கல் ஆற்றில் திடீரென பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தண்ணீரில் சிக்கியவர்களை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.



கோவை: கூலாங்கல் ஆற்றில் திடீர் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறையில் இரண்டு தினங்களாக மதியத்திற்கு மேல் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளிலும், வனப்பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் இன்று காலையிலிருந்து வெயிலின் தாக்கம் சற்று கூடுதலாக இருந்தது.

மதியத்திற்கு பின்பு வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளிலும் சின்னக்கல்லார், சிங்கோனா, போன்ற வன பகுதிகளிலும் கன மழை பெய்தது. சின்னக்கல்லார் பகுதியில் 7 செ.மீ மழை பதிவானது. அதிக மழையால் கூலாங்கல் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.



அப்போது வால்பாறை பகுதியில் மழை இல்லாத நிலையில் கூழாங்கல் ஆற்றில் சுற்றுலாப் பயணிகள் சிலர் குளித்துக் கொண்டிருக்கும் பொழுது அதிக தண்ணீர் வந்ததால் தவித்தனர்.



தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் அவர்களை கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...