வால்பாறை கூலாங்கல் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு - தண்ணீரில் சிக்கியவர்கள் மீட்பு

வால்பாறை அருகே கூலாங்கல் ஆற்றில் திடீரென பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தண்ணீரில் சிக்கியவர்களை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.



கோவை: கூலாங்கல் ஆற்றில் திடீர் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறையில் இரண்டு தினங்களாக மதியத்திற்கு மேல் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளிலும், வனப்பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் இன்று காலையிலிருந்து வெயிலின் தாக்கம் சற்று கூடுதலாக இருந்தது.

மதியத்திற்கு பின்பு வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளிலும் சின்னக்கல்லார், சிங்கோனா, போன்ற வன பகுதிகளிலும் கன மழை பெய்தது. சின்னக்கல்லார் பகுதியில் 7 செ.மீ மழை பதிவானது. அதிக மழையால் கூலாங்கல் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.



அப்போது வால்பாறை பகுதியில் மழை இல்லாத நிலையில் கூழாங்கல் ஆற்றில் சுற்றுலாப் பயணிகள் சிலர் குளித்துக் கொண்டிருக்கும் பொழுது அதிக தண்ணீர் வந்ததால் தவித்தனர்.



தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் அவர்களை கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...