கோவை சூலூரில் சூறைக் காற்றில் வாழை மரங்கள் சேதம் - மாவட்ட ஆட்சியர் மற்றும் எம்.எல்.ஏ நேரில் ஆய்வு!

சூலூர் அடுத்த ஜே.கிருஷ்ணாபுரம் பகுதியில் சூறைக்காற்றால் வாழை மரங்கள் சேதமடைந்த நிலையில், சூலூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.கந்தசாமி மற்றும் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி ஆகியோர் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் சென்று நேரில் சேதங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.



கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே சூறைக்காற்றில் சேதமடைந்த வாழைமரங்கள் குறித்து சூலூர் எம்.எல்.ஏ வி.பி.கந்தசாமி மற்றும் ஆட்சியர் கிராந்திகுமார் பாடி ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

கோவை மாவட்டம் சூலூர் வட்டத்துக்குட்பட்ட ஜே.கிருஷ்ணாபுரம், வலசுபாளையம், வஞ்சிபுரம், வங்கப்பாளையம், மூலனூர், சேத்தம்பள்ளி, சாலைப்புதூர் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகள் 300 ஏக்கருக்கு மேல் தேனி நேந்திரன் மற்றும் கதளி ரக வாழை மரங்கள் பயிரிட்டுள்ளனர்.



இதில் 150 ஏக்கருக்கு மேல் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் நேற்று இரவு திடீரென வீசிய சூறாவளி காற்றில் சிக்கி சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் குலைகளோடு சாய்ந்து சேதமடைந்தன.

ஒரு ஏக்கருக்கு ஆயிரம் வாழைக்கன்றுகள் வீதம் பயிரிடப்பட்டு இருந்த நிலையில் 150 ஏக்கருக்கு ஒரு லட்சம் மரங்களுக்கு மேல் சேதம் அடைந்துள்ளதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஒரு ஏக்கர் வாழை பயிரிட ஒன்றரை லட்சம் ரூபாய் செலவு செய்து அறுவடை நேரத்தில் வாழை சேதம் அடைந்துள்ளதால் ஏக்கருக்கு இரண்டு லட்சம் ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளதாகவும் வேதனையுடன் தெரிவித்தனர்.

தேன் நேந்திர வாழை தற்போது கிலோ 28 ரூபாய்க்கும் கதளி வாழை கிலோ 30 ரூபாய்க்கும் தற்பொழுது விவசாயி இடம் வாங்கப்பட்டு வரும் நிலையில் சேதம் அடைந்த வாழை மரங்களை மாவட்ட நிர்வாகம் முறையாக கணக்கீடு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.



இந்த நிலையில், இன்று சூலூர் சட்டமன்ற உறுப்பினர் வி பி கந்தசாமி மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, வருவாய்த்துறை அதிகாரிகள் ஆகியோர் கிருஷ்ணாபுரம் கிராமத்தில் கோவிந்தசாமி என்ற விவசாயியின் தோட்டத்தில் சூறாவளி காற்றால் ஏற்பட்ட சேதம் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.



மேலும் சூலூர் பகுதியில் எத்தனை வாழை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளது என வருவாய்த்துறை அதிகாரிகளிடம் மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார்.



தொடர்ந்து செய்தியாளர்களிடம் கோவை மாவட்ட ஆட்சியர் பேசியதாவது, அன்னூர், மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளை தொடர்ந்து சூலூர் வட்டத்துக்குட்பட்ட ஜே. கிருஷ்ணாபுரம் பகுதிகளிலும் சூறாவளி காற்றில் சேதமடைந்த வாழை மரங்கள் குறித்த கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

கணக்கெடுப்பு பணிகள் முடிந்த பின்பு பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கும், காப்பீடு செய்யாத விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்க தமிழக அரசிடம் பரிந்துரை செய்யப்படும். அதே போன்று கோவை மாவட்டம் முழுவதும் 34 குளங்களில் இருந்து விவசாயிகள் வண்டல் மண் எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து விவசாயிகள் பயனடைய வேண்டும்.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...