மது குடிப்பதற்கான சிறப்பு அனுமதி அரசாணை - தமிழக அரசு திரும்பப்பெற டாக்டர்.கிருஷ்ணசாமி வலியுறுத்தல்!

12 மணி நேர வேலை சட்ட மசோதாவை நிறுத்தி வைக்காமல் சட்டமன்றத்திலேயே திரும்ப பெறகோரி மே.1 ஆம் தேதி, புதிய தமிழகம் கட்சி சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் பேரணி நடத்தப்படுகிறது. தலித் கிறிஸ்தவர்கள் எஸ்சி பட்டியலில் வரவேண்டும் என்பதை திரும்பப் பெற வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.


கோவை: கோவை குனியமுத்தூரில் உள்ள பொதிகை இல்லத்தில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:



திமுக தேர்தல் பிரச்சாரத்தின்போது ஆட்சிக்கு வந்தவுடன் பூரண மதுவிலக்குக்கு கையெழுத்து இடப்படும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். ஆனால், ஆட்சிக்கு வந்து இரண்டு வருடம் ஆகிவிட்டது. அதேபோல டாஸ்மாக் கடைகளை சுற்றிலும் சட்டவிரோதமாக பார்கள் இயங்கி வருகிறது.

இந்த சூழலில் தமிழக அரசு அரசாணையில் திருமண மண்டபங்களில் முன்அனுமதி உடன் மதுக்கள் பரிமாறலாம் என வெளியிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் மாலை சரத்துக்கள் மாற்றி மீண்டும் வெளியாகியது. இது மது விலக்குக்கு நேர் எதிரானது. அதிமுக ஆட்சியில் கடைகளை குறைக்க முயன்றனர். நேற்று வெளியாகிய அரசாணை தமிழக மக்களுக்கு எதிரானது. நேற்றைய அரசாணையை முற்றாக ரத்து செய்ய வேண்டும்.

மேலும், இந்த அரசாணை சர்வதேச அரங்கில் விளையாட்டுக்கு பதிலாக மது ஆசையை தூண்டிவிடுவதற்கு ஏதுவாக உள்ளது.12 மணி நேர வேலை தொடர்பாக சட்ட மசோதாவை நிறுத்தி வைக்காமல் சட்டமன்றத்திலேயே திரும்ப பெற வேண்டும். சாதிய சிக்கல்களில் இருந்து வெளியே முன்னேறி சென்றவர்களை மீண்டும் தலித் பட்டியலுக்குள் அடைப்பது அம்மக்களுக்கு எதிரானது.

தலித் கிறிஸ்தவர்கள் எஸ்சி பட்டியலில் வரவேண்டும் என்பதை திரும்பப் பெற வேண்டும். திமுக அரசு ஒட்டுமொத்தத்தில் குழப்பத்தில் உள்ளது போல், தடுமாற்றத்தில் உள்ளது. ஆளுநருக்கு தீர்மானம் அனுப்பிவிட்டு குறை சொல்வார்கள். அரசு தடுமாறி அரசாணை வெளியிடுகிறது.

டாஸ்மாக்குக்கு எதிராக காங்கிரஸ், கம்யூனிஸ்ட், இஸ்லாமிய அமைப்புகள் வெளிப்படையாக கண்டிக்க முன்வர வேண்டும். அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் ஒன்றிணைந்து மே மாதம் பத்தாம் தேதி சென்னையில் நடைபெறும் டாஸ்மாக்குக்கு எதிரான பேரணியில் ஒத்துழைக்க வேண்டும்.

12 மணி நேர வேலை சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி மே ஒன்றாம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களில் பேரணி நடத்துகிறோம். அதேபோல ஜி-ஸ்கொயர், அதிகாரம் பெற்றவர்களின் ஆதரவோடும், அரசு ஆதரவோடும் செயல்படுகிறது.

இவ்வாறு, டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

Newsletter

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...

கோவையில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக கருதப்பட்ட புகைப்படக் கலைஞர் வழக்கில் அதிர்ச்சி திருப்பம்; திட்டமிட்டு கொலை செய்ததாக 2 பேர் நீதிமன்றத்தில் சரண்

கோவை தடாகம் அருகே காணாமல் போன புகைப்படக் கலைஞர் பிரவீன், ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக முதலில் கருதப்பட்ட நிலையில், அவரை...

வடவள்ளியில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 40-ல் உள்ள வடவள்ளி பகுதியில் அனுமதியின்றி விளம்பர போஸ்டர்கள் ஒட்டிய தனியா...

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...