தமிழகத்தில் இன்று கொங்கு மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை பதிவு - வானிலை மையம் தகவல்!

தமிழகத்தில் இன்றைய தினம் கொங்கு பகுதி மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை பதிவான நிலையில், ஈரோட்டில் சராசரியாக  37.5 டிகிரி செல்சியசும்,  கோவையில் சராசரியாக 36.3 டிகிரி செல்சியசும், நீலகிரியில் சராசரியாக 24.5 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


கோவை: ஈரோடு மற்றும் கோவை உள்ளிட்ட கொங்கு பகுதி மாவட்டங்களில் அதிகபட்சமான வெப்பநிலை பதிவானதாகவானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோடை காலம் துவங்குவதற்கு முன்பே தமிழகத்தில் வெயில் சுட்டெரிக்க துவங்கியது. இந்நிலையில், பல்வேறு மாவட்டங்களில் வெயில் வாட்டி வந்த நிலையில், கடந்த இரண்டு, மூன்று நாட்களாக அவ்வப்போது, மழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவி, பொதுமக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே இன்றைய தினம் ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட கொங்கு பகுதி மாவட்டங்களில் அதிகபட்சமான வெப்பநிலை பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,ஈரோடு மாவட்டத்தில்,அதிகபட்சமாக 38.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானதாகவும், குறைந்த பட்சமாக 23.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், சராசரியாக 37.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவானதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதேபோல், கோவை மாவட்டத்தில் அதிபட்சமாக 36.0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானதாகவும், குறைந்தபட்சமாக 25.4டிகிரி செல்சியஸ் வெப்பமும், சராசரியாக 36.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நீலகிரி மாவட்டம் குன்னூரில் அதிகபட்சமாக 22.3 டிகிரி செல்சியஸ் வெப்பமும், குறைந்தபட்சமாக 15.2 டிகிரி செல்சியஸ் வெப்பமும், சராசரியாக 24.5 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், கோவை மாவட்டம் வால்பாறையில் அதிகபட்சமாக 27.0 டிகிரி செல்சியஸ் வெப்பமும், குறைந்தபட்சமாக 16.0 டிகிரி செல்சியஸ் வெப்பமும், சராசரியாக 28.1 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...