கோவை மாவட்ட வங்கிகளுக்கு நடப்பாண்டில் 35,170 கோடி கடன் வழங்க இலக்கு - மாவட்ட ஆட்சியர் தகவல்!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்டத்தில் உள்ள வங்கிகளுக்கான கடன் திட்டப் புத்தகத்தை வெளியிட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, 2023-2024ஆம் ஆண்டிற்கான கடன் திட்டத்தில் தமிழகத்திலேயே அதிகபட்சமாக கோவை மாவட்டத்திற்கு 35,170 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என்று கூறினார்.


கோவை: கோவை மாவட்ட வங்கிகள் 2023-2024ஆம் ஆண்டில் 35,170 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 2023 - 2024 ஆம் ஆண்டிற்கான கோவை மாவட்ட வங்கிகளின் வருடாந்திர கடன் திட்ட (ACP) புத்தகத்தை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் வெளியிட்டார்.



இப்புத்தகத்தின் முதல் பிரதியை கனரா வங்கி துணைப் பொது மேலாளர் சோபித் அஸ்தானா, நபார்டு வங்கி மாவட்ட மேலாளர் திருமலா ராவ், ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.



இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி பேசியதாவது,

ஒவ்வொரு ஆண்டும் நபார்டு வங்கி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வளம் சார்ந்த வங்கி கடன் திட்டத்தை தயாரித்து வெளியிடுகிறது. அதனடிப்படையில், தமிழ்நாட்டிலேயே மிகவும் அதிக பட்சமாக 35,170 கோடிக்கு கோயம்புத்தூர் மாவட்டத்தில் வங்கிகளின் மூலம் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2023-2024ஆம் ஆண்டிற்கான கடன் திட்டத்தில் விவசாயத்திற்கு 15,000 கோடியும், சிறு குறு நடுத்தர தொழில் மையத்திற்கு 18,850 கோடியும் இன்னும் பிற முன்னுரிமை கடன்களுக்கு 1320 கோடி என மொத்தம் 35,170 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இது கடந்த ஆண்டை விட 7470 கோடி அதிகம்.

இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து RSETI யில் பயிற்சி பெற்ற 5 நபர்களுக்கு சிறந்த தொழில் முனைவோர் விருதுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...