கோடநாடு கொள்ளை வழக்கு - கனகராஜ் குடும்ப ஜோசியரிடம் விசாரிக்க சிபிசிஐடி திட்டம்!

கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான உயிரிழந்த சேலம் கனகராஜ், இறுதியாக குடும்பத்துடன் சந்தித்த ஜோசியரிடம் விசாரணை மேற்கொள்ள சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர். அதற்காக அவருக்கு வரும் மே முதல் வாரத்தில் சம்மன் அனுப்பி விரைவில் விசாரணை நடத்த உள்ளனர்.


கடந்த 2017ல் நடந்த கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரணையை தீவிரபடுத்தியுள்ளனர். 200க்கும் மேற்பட்டோரிடம் மறுவிசாரணை நடைபெற்றது.

2017ல் நீலகிரி மாவட்டத்தில் இருந்து பிற இடங்களுக்கு பேசி தொலைப்பேசி பதிவுகளை சேகரித்துள்ளனர். அன்மையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பாதுகாப்பு அதிகாரியாக இருந்த உதவி ஆணையர் கனகராஜ் என்பவரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

பாதுகபாப்பு அதிகாரியான கனகராஜ் அடிக்கடி சேலம் கனகராஜிடன் செல்போனில் பேசியது தெரியவந்தது. இந்நிலையில் கோடநாடு வழக்கின் முக்கிய குற்றவாளியான விபத்தில் உயிரிழந்த சேலம் கனகராஜ்,



உயிரிழக்கும் முன் குடும்பத்துடன் எடப்பாடியில் உள்ள ஜோதிடரை சந்தித்ததாகவும், அப்போது கண்டம் உள்ளதால் இன்று ஒரு நாள் தப்பித்துவிட்டால், பெரிய உயரத்திற்கு செல்ல வாய்ப்பு உள்ளதாக ஜோதிடர் கூறியதாகவும் தெரிகிறது.

இந்நிலையில் எடப்பாடியை சேர்ந்த ஜோதிடரை சிபிசிஐடி போலீசார் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். அதற்காக அவருக்கு வரும் மே முதல் வாரத்தில் சம்மன் அனுப்பி விரைவில் விசாரணை நடத்த உள்ளனர்.

Newsletter

கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் கதவு உடைத்து திருட முயன்ற முகமூடி திருடர்கள் தப்பியோட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் நேற்று மாலை 7 மணியளவில் நாச்சிமுத்து வீட்டின் முன்பக...

காங்கேயம் பாப்பினியில் ரூ.2.5 லட்சம் மதிப்பிலான 19 ஆடுகள் திருட்டு; விவசாயிகள் மத்தியில் அச்சம்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பாப்பினியில் விவசாயி பொன்னுசாமியின் தோட்டத்தில் இருந்து நள்ளிரவில் மர்ம நபர்கள் 19 ஆடுகளை...

தாராபுரம் அருகே குடிபோதையில் அண்ணன்-தம்பி மோதல்: அருவாள் தாக்குதலில் அண்ணன் படுகாயம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தம்பி சேனாதிபதி அண்ணன் சந்திரசேகரை அருவாளால் வெட்டிய ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...