பணியிடமாற்றம் ஆகும் அதிகாரிக்கு நன்றி சொல்லி வழியனுப்பி வைத்த மக்கள்


கோவை மாவட்ட வருவாய் அலுவலர் கிருஸ்துராஜ் பணியிடமாற்றம் செய்யப்பட உள்ள நிலையில் அவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பொதுமக்கள் பூங்கொத்து கொடுத்து வழியனுப்பினர்.



கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட குறவர் இன மக்கள் சாலைகளில் வசித்து வந்தனர். 40 ஆண்டுகளுக்கு மேலாக அவர்கள் வீட்டு மனை மற்றும் குடியிருப்பு பகுதிகள் வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து வந்தனர்.

இந்நிலையில் அர்ச்சனா பட்நாயக் மாவட்ட ஆட்சியராக இருந்தபொழுது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மீண்டும் இவர்கள் மனு அளித்தனர். அப்போது கோவை மாவட்ட ஆட்சியராக இருந்த அர்ச்சனா பட்நாயக்கும், மாவட்ட வருவாய் அலுவலரான கிருஸ்துராஜும் நேரில் சென்று அம்மக்களின் நிலையை பார்த்து அவர்களில் 18 பேருக்கு இடிகரை பகுதியில் பட்டா வழங்கினர். இதில், தற்போது குடியிருப்பு கட்டுமான பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, மாவட்ட ஆட்சியராக இருந்த அர்ச்சனா பட்நாயக் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். தற்போது மாவட்ட வருவாய் அலுவலர் கிருஸ்துராஜும் புதன்கிழமை பணியிடமாற்றம் ஆக இருக்கிறார்.

இதனையொட்டி கிருஸ்துராஜுக்கு குறவர் இன மக்கள் தாங்கள் செய்த அழங்கார கூடைகளுடன் பூங்கொத்தை கொடுத்து நன்றி செலுத்தியதோடு, அவரை மீண்டும் கோவையிலேயே பணிமேற்கொள்ள வர வேண்டும் என கோரிக்கையும் விடுத்தனர்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...