உடுமலையில் ஆன்லைன் பொருட்கள் விநியோக நிறுவனத்தில் ரூ.4 லட்சம் கொள்ளை!

உடுமலை அருகேயுள்ள எலையமுத்தூர் பிரிவில் உள்ள பாலாஜி என்பவரது ஆன்லைன் பொருட்கள் விநியோகம் செய்யும் கடையின் பூட்டை உடைத்து ரூ.4.12 லட்சம் பணம் மற்றும் சிசிடிவி காட்சிகள் பதிவாகும் ஹார்ட் டிஸ்க் ஆகியவை திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: உடுமலை அருகே ஆன்லைன் பொருட்கள் விநியோகம் செய்யும் கடையின் பூட்டை உடைத்து ரூ.4 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள குமரலிங்கம் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி. இவர் எலையமுத்தூர் பிரிவில் அரசு கலைக்கல்லூரி செல்லும் வழியில் ஆன்லைன் பொருட்களை வினியோகிக்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் நேற்று இரவு வேலையை முடித்துக் கொண்டு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் இன்று காலை அவர் மீண்டும் வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பாலாஜி உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோவுக்குள் இருந்த ரூ. 4 லட்சத்து 12 ஆயிரம் பணம் மற்றும் சிசிடிவி கேமராவின் ஹார்ட் டிஸ்க் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து உடுமலை காவல்நிலையத்தி பாலாஜி புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகை பதிவுகளை சேகரித்து மர்ம நபர்கள் குறித்தி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடைகள் அதிகம் இருக்கும் பகுதியில் பூட்டு உடைக்கப்பட்டு பணம் மற்றும் ஹார்ட் டிஸ்க் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் உடுமலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...