உடுமலையில் பயனாளிகள் தேர்வுக்கான சிறப்பு முகாம் - தோட்டக் கலைத்துறை ஏற்பாடு!

உடுமலை அடுத்த ரெட்டிபாளையம் கிராமத்தில், தோட்டக் கலைத்துறை சார்பில், பயனாளிகள் தேர்வுக்காக சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்டவர்களுக்கு தோட்டக் கலை துறை சார்பில் செயல்படுத்தப்படும் மானியத் திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டது.



திருப்பூர்: உடுமலை அடுத்த ரெட்டிபாளையம் கிராமத்தில், தோட்டக் கலைத்துறை சார்பில், பயனாளிகள் தேர்வுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.

உடுமலை வட்டாரத்தில், கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், தேர்வு செய்யப்பட்ட கிராமங்களுக்கு, சிறப்பு மானிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அவ்வகையில், ரெட்டிபாளையம் கிராமத்தில், தோட்டக் கலைத்துறை சார்பில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.



வட்டார தோட்டக் கலைத்துறை இயக்குனர் மோகன ரம்யா தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் தோட்ட கலைதுறை சார்பில், செயல்படுத்தப்படும் மானியத் திட்டங்கள், அதற்கு விண்ணப்பிக்கும் முறை குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

மேலும், பயனாளிகள் தேர்வுக்காக விளைநிலங்களில், அதிகாரிகள் நேரடி கள ஆய்வு செய்தனர். அப்பகுதியில் தென்னை சாகுபடியில் காணப்படும் நோய் மற்றும் பூச்சித்தாக்குதலை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும் முகாமில் விளக்கம் அளிக்கப்பட்டது.

ரெட்டிபாளையம் கிராம விவசாயிகள் மற்றும் தோட்ட கலைத்துறை உதவி அலுவலர் பிரியங்கா உட்பட அலுவலர்கள் பலரும் இந்த முகாமில் பங்கேற்றனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...