கோவையில் ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் - ஏராளமான விவசாயிகள் பங்கேற்பு!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தலைமையில் இன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் பங்கேற்று தங்கள் குறைகளை கோரிக்கை மனுக்களாக மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்று கோரிக்கைகளை மனுக்களாக ஆட்சியரிடம் அளித்தனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பார்த்திபன், இணை இயக்குநர் வேளாண்மை முத்துலட்சுமி,தோட்டக்கலை துறை துணை இயக்குநர் புவனேஸ்வரி, விவசாயிகள் சங்கத் தலைவர்கள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் பட்டா மாறுதல், ஆக்கிரமிப்பு அகற்றுதல், நிலத்தடி நீர் உயர்த்திட நடவடிக்கை, பாலம் கட்டுதல், சாலைகள் சரி செய்தல், தொழிற்சாலை கழிவுகள் மற்றும் கழிவுநீர் அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக விவசாயிகளிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டது.



தமிழ்நாடு வேளாண் பல்கலைகழக பயிர் பாதுகாப்புத்துறை சார்பில் தென்னை வாடல் நோய் கட்டுப்பாட்டு முறைகள் குறித்து விளக்கமாகவும் மற்றும் வனவியல் துறை சார்பில் காட்டு பன்றியினால் ஏற்படும் வேளாண் விளைபொருள் சேதத்தை தடுக்கும் முறைகளும் எடுத்துரைக்கப்பட்டது.

மேலும் தென்னை வாடல் நோய் சம்பந்தமாகவும் வேளாண் விளைபொருட்கள் மதிப்பு கூட்டுதல் சம்பந்தமாகவும், கொப்பரை கொள்முதல் சம்பந்தமாகவும், கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. பின்னர் விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மனுவாக மாவட்ட ஆட்சித்தலைவரிடம் தெரிவித்தனர்.

நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றவும், மேற்கு சித்திரை சாவடி பாசன மதகுகளை சரி செய்யவும், நொய்யல் ஆற்றில் கழிவு மற்றும் மாசு கலப்பதை தடுக்கவும். கொப்பரை கொள்முதல் விலையை அதிகப்படுத்தவும், கனிமவள கடத்தலை தடுக்கவும். குளப்பத்துகுளம் பாசன சபை அமைக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும் மலர், காய்கறி, பழங்கள் விற்பனை செய்வதற்கு தனி மார்க்கெட் அமைத்து தரவும், அங்கக உர மேலாண்மையை மேம்படுத்தவும், வாழை பயிருக்கு காரீப் பருவத்தில் பயிர் காப்பீடு செய்யவும் வழிவகை செய்ய வேண்டும் எனவும் விவசாயிகள்கோரிக்கை வைத்தனர்.

Newsletter

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...

பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் மது போதையில் தள்ளி இளைஞர் கொலை - குற்றவாளி கைது

பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியில் குடும்ப பூசல் காரணமாக மது போதையில் வந்த ஆனந்த் என்பவர் பாலகிருஷ்ணனை தள்...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு தோன்றி பரபரப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் அறையில் நேற்று எதிர்பாராதவிதமாக பாம்பு ஒன்று தோன்றியதால் பரபரப்...

மூளைச்சாவடைந்த இளைஞரின் உறுப்பு தானம் மூவருக்கு புதுவாழ்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள வெஞ்சமடை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் கருப்புசாமி மே 10ஆம் தேதி இருசக்...

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...