கோவை அரசு மருத்துவமனை அருகே ஏர்ஹாரணை ஒலிக்க விடும் பேருந்துகள் - நோயாளிகள் அவதி!

கோவை அரசு மருத்துவமனைக்கு எதிரேயுள்ள பேருந்து நிலையத்தில் அனைத்து பேருந்துகளும் இங்கு வந்து செல்லும் போது, போட்டி போட்டுக்கொண்டு ஏர் ஹாரனை ஒலிக்கவிடுவதால், நோயாளிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.


கோவை: கோவை அரசு மருத்துவமனை அருகே ஏர் ஹாரனை ஒலிக்க விடும் பேருந்துகளால் நோயாளிகள் பாதிப்புக்குள்ளாவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கோவை அரசு பேருந்து நிலையத்துக்கு எதிரே அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனைக்கு கோவை மாவட்டம் மட்டுமன்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான நோயாளிகள் வந்து செலகின்றனர்.

ஒரு நாளைக்கு சராசரியாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் அரசு மருத்துவமனைக்கு வருவதும் அங்கிருந்து சிகிச்சை முடிந்து வெளியேறுவதும் வழக்கம்.

இந்நிலையில் அரசு மருத்துவமனைக்கு எதிர்புறம் உள்ள பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்துகளும், அரசு பேருந்துகளும் போட்டி போட்டுக் கொண்டு ஏர் ஹாரன்களை ஒலிக்க விடுகின்றனர் என கூறப்படுகிறது.

அந்த பேருந்து நிலையத்தின் பரப்பளவு மிகவும் குறைவானதாகும். ஒரு பேருந்து வெளியே சென்றால் மட்டுமே, பின்னால் வரும் அடுத்த பேருந்து வெளியேற முடியும்.

நேரப் பிரச்சினை காரணமாக ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு செல்வது அங்கு வாடிக்கையாக நடந்து வருகிறது. இதனால் ஏர்ஹாரன் சத்தம் அந்த இடத்தில் எந்த நேரமும் ஒலித்துக் கொண்டிருப்பதை காண முடிகிறது. 

இந்த சத்தம் காரணமாக அங்கு வரும் நோயாளிகளுக்கு பதட்டம், மன அழுத்தத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இது குறித்து நோயாளிகள் கூறியதாவது, இவர்கள் அடிக்கும் ஏர்ஹாரன் பிரசவ வார்டு வரை கேட்கிறது. பொதுவாக சிகிச்சையில் இருக்கும் நோயாளியிடம் சத்தமாக பேசக்கூடாது என்று கூட மருத்துவர்கள் அறிவுறுத்துவது வழக்கம்.

ஆனால் இந்த ஏர் ஹாரன் சத்தங்கள் நோயாளிகளின் நெஞ்சை பதற வைக்கிறது. ஓட்டுனர்கள் இதனை புரிந்து கொண்டு செயல்பட்டால் மட்டுமே நல்லது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது, பொதுவாக நகர்ப்புற எல்லைக்குள் ஏர் ஹாரன் அடிக்க கூடாது என்று வட்டாரப் போக்குவரத்து துறை அறிவுறுத்தி உள்ளது. ஆனாலும் அதையும் மீறி ஒரு சில ஓட்டுனர்கள் இவ்வாறு செயல்பட்டு வருகிறார்கள்.

அவ்வாறு செயல்படும் ஓட்டுநர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். வட்டாரப் போக்குவரத்து துறையினரும் போக்குவரத்து போலீசாரும் இதனை அன்றாடம் கண்காணிக்க வேண்டும்.

அவ்வாறு கண்காணிக்கும் பட்சத்தில் நகர்ப்புற எல்லைக்குள் அமைதியான பயணத்தை மேற்கொள்ளலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...