உடுமலை அருகே கழிவுகளால் சுகாதார சீர்கேடு - பொதுமக்கள் கோரிக்கை!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குரல்குட்டை ஊராட்சியில் கழிவுகள் கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள குரல்குட்டை ஊராட்சிக்கு உட்பட்ட கிழக்கு சுடுகாடு மற்றும் நீர்வழிபள்ளம் குப்பைக்கிடங்காக மாறி துர்நாற்றமும் நோய்பரப்பும் இடமாகவும் மாறியுள்ளது.



கிழக்குபள்ளத்தில் தனியார் மில்லின் கழிவுநீர், குப்பைகள், கோழி இறைச்சிக் கழிவுகள் கொட்டப்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட தனியார் மில்லின் மீதும் கோழிக்கழிவுகள் கொண்டு வந்து கொட்டுவோர் மீதும் சுடுகாட்டில் கட்டிடக் கழிவுகள் கொட்டுவோர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலமுறை மனு கொடுத்தும் போராட்டம் நடத்தியும் இதேநிலை தொடர்வதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். பள்ளங்களில் பன்றிக் குடிசைகள் உட்பட பல்வேறு ஆக்கிரமிப்புகளும் அப்பகுதியில் இருந்து வருகிறது.



உடுமலை ஊராட்சி ஒன்றியமும் குரல்குட்டை ஊராட்சியும் இப்பிரச்சனைகள் தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அடுத்தக்கட்ட போராட்டம் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...