மகுடங்களை மறுதலித்த ஒப்பற்ற தலைவர் வைகோ - கோவை மாநகர் மாவட்ட செயலாளர் அறிக்கை

மதிமுகவுக்கு எதிராக அக்கட்சியின் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி போர்க்கொடி தூக்கியுள்ளார். இதற்கு பதிலடியாக கோவை மாநகர மாவட்டச் செயலாளர் கணபதி செல்வராசு, துரைவைகோவுக்கு ஆதரவாக வெளியிட்டுள்ள அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: மதிமுகவை திமுகவுடன் இணைத்துவிடலாம் என மதிமுக அவைத் தலைவர் துரைசாமி , வைகோவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்த விவகாரம் மதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் கணபதி செல்வராசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், மகுடங்களை மறுதலித்த ஒப்பற்ற தலைவர் வைகோ. அவரால் அவருக்காக தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம் மறுமலர்ச்சி திமுக. அந்த இயக்கத்தை வேறு ஒரு இயக்கத்துடன் இணைக்கச் சொல்ல பெரியவர் துரைசாமிக்கு எந்த உரிமையும் இல்லை.

திமுக கூட்டணியில் இருக்கும் போதே அதிமுக வை ஆதரித்து பேசியவர் இது போன்ற இழிவான அருவருப்பான அரசியலை இனியாவது கைவிட வேண்டும்.

இயக்கத்தை பிளவு படுத்த நினைத்த தீய சக்திகள் தமிழகம் முழுவதும் ஆளுகிற ஆண்ட இயக்கங்களுக்கு இணையாக வீறு கொண்டு நடைபெறுகிற மறுமலர்ச்சி திமுக ஐந்தாவது அமைப்பு தேர்தலால் நிலைகுலைந்து போயிருக்கிறது.

அதன் வெளிப்பாடே பெரியவர் துரைசாமியின் பேட்டி. தலைவர் வைகோ அவர்களின் வழிகாட்டுதலில் எங்கள் கோவை மாநகர் மாவட்ட மதிமுக பயணம் தொடரும். நம்மவர் துரை வைகோ அவர்களின் கருத்தை ஏற்று இதை கடந்து செல்வோம்.

இவ்வாறு, அவர் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

கோவையில் தொடரும் கொலை சம்பவங்கள்: ஆலாந்துறையில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக்கொலை

கோவை ஆலாந்துறையில் நாகராஜ் (60) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரை போ...

இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...