உடுமலையில் உயர் நீதிமன்ற நீதிபதிக்கு பாராட்டு விழா - வழக்கறிஞர் சங்கம் ஏற்பாடு!

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் புதிய நீதிபதியாக பதவி ஏற்றுள்ள வடமலை மற்றும் மூத்த வழக்கறிஞர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. வழக்கறிஞர் மன்றம் சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


திருப்பூர்: மதுரை கிளை உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்றுள்ள, நீதிபதி வடமலை மற்றும் மூத்த வழக்கறிஞர்களுக்கு பாராட்டு விழா, திருப்பூர் மாவட்டம் உடுமலை வழக்கறிஞர் மன்றம் சார்பில் நடத்தப்பட்டது.

உடுமலையில் உள்ள நகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவிற்கு வந்தவர்களை உடுமலை பார் வழக்கறிஞர் மன்ற தலைவர் மனோகரன் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் நீதிபதி வடமலை பேசுகையில், உடுமலையில், பிறந்து, அரசு பள்ளி, கல் லுாரியில் படித்து, இன்று உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்றுள்ளேன். அந்த காலத்தில், சீனியர் வக்கீல்கள், சிறிய நோட் புத்தகத் தில், வழக்கு சம்பந்தமான அனைத்து தகவல்கள், ஆதரவாக வந்துள்ள தீர்ப்புகள், சட்ட நுணுக்கங்களை வைத்திருந்தனர்.



இன்று கம்ப்யூட்டரை தட்டினால், அனைத்து தகவல்களும் கிடைத்து விடுகிறது. இளம் வக்கீல்கள், படித்து முடித்ததும், அலுவலகம் திறந்து, வழக்காட வேண்டும் என நினைக்க வேண்டாம். குறைந்தபட்சம், 3 ஆண்டுகளாவது சீனியர் வக்கீல்களிடம், வக்கீல் தொழிலை நன்கு கற்க வேண்டும்.

அதேபோல், நீதிபதிகளுக்கான காலிப்பணியிடங்கள் அதிகளவு உள்ளது. இளம் வக்கீல்கள், நீதிபதிக்கான தேர்வுகள் எழுத முன்வர வேண்டும்.

இவ்வாறு, அவர் பேசினார்.



இந்த விழாவில், திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிபதி ஸ்வர்ணம் ஜெ நடராஜன், கூடுதல் மாவட்ட நீதிபதி நாகராஜன், மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிபதி புகழேந்தி மற்றும் வக்கீல்கள் பங்கேற்றனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...