திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்த பெண் - தாராபுரம் அருகே போலீசாரால் கைது!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே திருட்டு வழக்கில் மதன், லோகேஸ்வரன் என இருவரை கைது செய்த நிலையில், தலைமறைவாக இருந்த சுமதி என்கிற பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து மூன்றே கால் பவுன் தங்க நகையும் பறிமுதல் செய்தனர்.


திருப்பூர்: தாராபுரத்தை அடுத்த காங்கயம் பாளையம் தெக்கலூர் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் என்கிற அலையாசி மதன் (வயது 35).

இவருடைய மனைவி சுமதி (வயது31). அதே பகுதியில் வசிக்கும் நண்பர் லோகேஸ்வரன் (வயது35).

இவர்கள் 3 பேரும் கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் தாராபுரம் பொள்ளாச்சி சாலையில் உள்ள வழக்கறிஞர் வீட்டிலும், நஞ்சம்பாளையம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலில் சாமி கழுத்தில் இருந்த மாங்கல்யத்தையும் திருடிச் சென்றனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இதையடுத்து, இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக தாராபுரத்தை அடுத்த காங்கயம் பாளையம் தெக்கலூர் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் என்கிற அலையாசி மதன் (வயது 35) மற்றும் இவருடைய நண்பர் லோகேஸ்வரன் (வயது35) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய செல்வகுமார் மனைவி சுமதியை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில், சுமதியை கண்டுபிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து சப்-இன்ஸ்பெகடர் கருப்பு சாமி விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சுமதி கழுத்தில் நகை அணிந்து இருந்தார். அது திருட்டு நகைதான் என தெரியவந்தது.

இதையடுத்து, சுமதியை கைது செய்து, அவர் அணிந்திருந்த 3¼ பவுன் தங்க நகையை பறிமுதல் செய்தனர். கைதான சுமதி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தபட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...