பல்லடம் அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி போராட்டம்

பல்லடம் அருகே சின்னிய கவுண்டம்பாளையம் கிராமத்தில் இயங்கி வரும் அரசு மதுபான கடையால் விவசாய நிலம் பாதிப்படைவதாகவும் பொது மக்களுக்குப் பாதுகாப்பற்ற நிலை உருவாகி உள்ளதால் அரசு மதுபான கடையை நிரந்தரமாக மூடக்கோரி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: பல்லடம் அருகே அரசு மதுபான கடையை நிரந்தரமாக மூடக்கோரி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சின்னியகவுண்டம்பாளையம் கிராமத்தில் அரசு மதுபான கடை இயங்கி வருகிறது. இங்கு இயங்கி வரும் மதுபான கடையால் அருகில் உள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாகவும் குடிமகன்கள் மது பாட்டில்களை விவசாய நிலத்திலும் சாலைகளிலும் வீசி செல்வதால் கால்நடைகள் பாதிக்கப்படுவதாகவும்,



மதுபான கடைக்கு அருகிலேயே அங்கன்வாடி மையம்,பள்ளிக்கூடங்கள், கோவில்கள் அமைந்துள்ளதாகவும் பள்ளி குழந்தைகள் அவ்வழியாகச் செல்வதற்கு கூட அச்சமடைவதாகவும், பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உருவாகியுள்ளதாகவும் 24, மணி நேரமும் சட்டவிரோதமாகவும் மது விற்பனை நடைபெறுவதால் மிகுந்த பாதிப்பு ஏற்படுவதால் இந்த மதுபான கடையை நிரந்தரமாக மூடக்கோரி மாவட்ட ஆட்சியரிடமும்,



முதலமைச்சரின் தனிப்பிரிவிலும் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் இன்று அப்பகுதி பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் மதுபான கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

பெண்கள் கோஷமட்டபடி ஒருபுறம் போராட்டம் நடத்திய நிலையில் 50க்கும் மேற்பட்ட போலீசாரின் பாதுகாப்புடன் மது விற்பனை ஜோராக நடைபெற்றது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து அனுப்பி வைத்தனர்.

Newsletter

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...