தாராபுரம் அருகே உறவினர் வீட்டில் பாத்திரங்கள் திருட்டு - இளைஞர் உட்பட 2 பேர் கைது!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே அத்தை வீட்டின் மேற்கூரை ஓட்டை பிரித்து உள்ளே இறங்கி பாத்திரங்களைத் திருடிய இளங்கோ என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். இதில் தொடர்புடைய மேலும் ஒரு நபரான முத்துக்குமார் என்பவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


திருப்பூர்: தாராபுரம் அருகே அத்தை வீட்டின் மேற்கூரை ஓட்டை பிரித்து உள்ளே இறங்கி பாத்திரத்தை திருடி சென்ற வழக்கில் இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தாராபுரம் அடுத்த டி.காளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி ராமாத்தாள். சம்பவத்தன்று இவர்கள் இருவரும் தோட்ட வேலை சம்பந்தமாக வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றிருந்தனர். பின்னர் மதியம் வீட்டிற்கு வந்த ராமாத்தாள், கதவை திறந்து பார்த்த போது வீட்டின் மேல் கூரையில் ஓடு பிரித்து இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து சரவணனுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார். அப்போது வீட்டிற்கு வந்த சரவணன் வீட்டில் உள்ள பொருட்களை பார்த்தபோது, விலை உயர்ந்த பாத்திரங்கள் காணாமல் போனது தெரியவந்தது. இது குறித்து தாராபுரம் போலீசில் அவர் புகார் கொடுத்தார்.

அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கருப்புசாமி வழக்குபதிவு செய்து குற்றவாளியை தேடி வந்தனர். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த உறவினரான முத்துசாமி மகன் இளங்கோ (வயது 22) , என்பவர், தனது நண்பர் முத்துகுமார் (வயது35) என்பவருடன் சேர்ந்து ராமாத்தாள் வீட்டின் மேல் ஏறி ஓட்டை பிரித்து இறங்கி இருவரும் பாத்திரங்களை திருடி சென்றதாக ஒப்புக் கொண்டனர்.

இதனையடுத்து, தாராபுரம் குற்றப்பிரிவு போலீசார், இளங்கோவன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதைத் தொடர்ந்து, இன்று காலை தாராபுரம் 5 சாலை சந்திப்பு பகுதியில் தலைமறைவாக இருந்த முத்துக்குமாரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...