பொள்ளாச்சியில் தூய்மைப்பணியாளர்கள் வாழ்வுரிமை பேரணி - 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி அனைத்து வகையான தூய்மை பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தூய்மை பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொள்ளாச்சியில் நடைபெற்ற மே தினப் பேரணியில் தமிழகத்தில் கலைஞர் அறிவித்த 6 மணி நேர வேலைத் திட்டத்தை உறுதிப்படுத்த வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது.



பொள்ளாச்சி: உழைப்பாளர் தினத்தையொட்டி, பொள்ளாச்சியில் தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கர் சுகாதார தூய்மை மற்றும் பொது பணியாளர்கள் சங்கம் சார்பில் தூய்மை பணியாளர்களின் வாழ்வுரிமை பேரணி நடைபெற்றது.

மாவட்ட தலைவர் முருகானந்தம் மாவட்டச் செயலாளர் வேல்முருகன் தலைமையில் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடங்கி பேரணி, மத்திய பேருந்து நிலையம், வெங்கட்ராமன் வீதி வழியாக சென்று நகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது. இதில் 200.க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.



இந்தப் பேரணியின்போது, திமுக அரசு கடந்த தேர்தல் அறிக்கையில் அறிவித்த அனைத்து வகையான தூய்மை பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். உள்ளாட்சி துறையில் உள்ள ஒரு லட்சம் பணியாளர்கள் வேலை இழக்கும் வகையில் 152, 139,111 அரசாணை வெளியிடப்பட்டது.



உடனடியாக தமிழக அரசு அந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும். சட்டமன்றத்தில் 12 மணி நேர வேலை திட்டத்தை முன்மொழிந்துள்ளனர். உடனடியாக அந்தத் திட்டத்தை வாபஸ் பெற்று கலைஞர் அறிவித்த 6 மணிநேர வேலை திட்டத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...