மே தினத்தையொட்டி கோவையில் கிராம சபை கூட்டம் - ஆட்சியர் கிராந்திகுமார் பாடி பங்கேற்பு!

மே மாதம் 1ஆம் தேதியான இன்று தொழிலாளர் தினத்தையொட்டி, கோவை மாவட்டத்தில் உள்ள 228 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில், இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கலந்து கொண்டு அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.


கோவை: மே தினத்தை முன்னிட்டு கோவை மாவட்டம் இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஆட்சியர் கலந்து கொண்டு மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.



மே 1ஆம் தேதி தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் உள்ள 228 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக கோவையை அடுத்த இடிகரை போளுவாம்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

ஊராட்சியின் தலைவர் அம்பி என்கிற சதானந்தம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கிராந்திக்குமார் பாடி சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார்.

இதில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், கிராம வளர்ச்சி திட்டம், நமக்கு நாமே திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, ஜல் ஜீவன் இயக்கம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும் நடைபெற்று முடிந்த பணிகள், செயல்படுத்தப்பட்டு வரும் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பணிகள் குறித்து தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து குழந்தை திருமணம், திறந்தவெளி கழிப்பிடம் கூடாது என மாவட்ட ஆட்சியர் வாசிக்க பொதுமக்கள் அனைவரும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.



இதனையடுத்து கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது குறைகளை மனுக்களாக கொடுத்தனர். மனுவின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த கிராம சபை கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் அலமேலு மங்கை, ஊராட்சி செயலர் நாகராஜ் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...