தொழிலாளர் தினத்தை ஒட்டி திருப்பூரில் பாமக சார்பில் மே தின ஊர்வலம்!

மே தினத்தை ஒட்டி திருப்பூரில் பாமக தொழிற்சங்கம் சார்பில் நடைபெற்ற ஊர்வலத்தில் திருப்பூரில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில் தமிழர்களுக்கு 85 சதவீத பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


திருப்பூர்: தொழிலாளர் தினத்தை ஒட்டி திருப்பூரில் பாமக சார்பில் நடைபெற்ற மே தின ஊர்வலத்தில் ஆயிரகணக்கானோர் கலந்து கொண்டனர்.

மே 1ஆம் தேதியான இன்று நாடு முழுவதும் தொழிலாளர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகர மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் பாட்டாளி தொழிற்சங்கத்தின் சார்பாக திருப்பூர் குமரன் நினைவகத்தில் இருந்து மாநகராட்சி அலுவலகம் வரை மே தின தொழிலாளர் பேரணி நடைபெற்றது.



இதில் பாட்டாளி தொழிற்சங்கத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு மே தின முழக்கம் எழுப்பியவாறு ஊர்வலமாக சென்றனர்.



பாட்டாளி மக்கள் கட்சியின் திருப்பூர் மாநகர மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில் தொழிலாளர்களுக்கு ஆறு மணி நேர வேலையாக சமமாக மாற்றக்கோரியும், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில் தமிழர்களுக்கு 85 சதவீத பணி வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். திருப்பூர் மாவட்ட தொழிற்சாலைகளில் தொழிலாளர்களுக்கான இ எஸ் ஐ, பி எப் பிடித்தம் செய்வதை உறுதி செய்துவிட வேண்டும். வணிக வளாகங்களில் உள்ள தொழிலாளர்களை 14 மணி நேரம் பணி செய்ய கட்டாயப்படுத்தும் நடவடிக்கையை கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.



வெளிமாவட்டத்திலிருந்து திருப்பூருக்கு வந்து தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கீடு செய்து தர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் இந்த மே தின ஊர்வலத்தில் வலியுறுத்தப்பட்டன.

இந்த நிகழ்வில் மாவட்ட தலைவர் ஆனந்தன், மாநில பொதுக்குழு உறுப்பினர் கோவிந்தராஜ், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் கார்த்திக், மாவட்ட தொழிற்சங்க தலைவர் சங்கர், மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் மணிகண்டன், மாநில செயற்குழு உறுப்பினர் ஜெய்சங்கர், ராஜேந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...