மக்களை ஏமாற்றும் ஆட்சியாகவே இந்த ஆட்சி உள்ளது..! - பொள்ளாச்சியில் எஸ்பி வேலுமணி குற்றச்சாட்டு

பொள்ளாச்சியில் கோவை மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் நடைபெற்ற மே தின பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கலந்துகொண்டார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. விரைவில் திமுக ஆட்சி முடிவுக்கு வரும் என்று எஸ்பி வேலுமணி தெரிவித்தார்.



கோவை: கோவை தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் பொள்ளாச்சி பல்லடம் சாலையில் உள்ள ராஜேஸ்வரி திடலில் மே தின பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தொழிற்சங்கத்தின் மாவட்ட செயலாளர் PRK குருசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி, சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமி,

பொள்ளாச்சி நகர செயலாளர் கிருஷ்ணகுமார், வால்பாறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரிவாசு உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்பி வேலுமணி கலந்துகொண்டார். பொதுகூட்டத்தில் பேசிய அவர், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. விரைவில் திமுக ஆட்சி முடிவுக்கு வரும்.



திமுக ஆட்சி பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகளுக்குமேல் ஆகியும் எந்த திட்டத்தையும் கொண்டுவரவில்லை. கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை கிடப்பில் போட்டுள்ளனர். மக்களை ஏமாற்றும் ஆட்சியாகவே இந்த ஆட்சி உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...