கோவையில் இருந்து மும்பைக்கு நாளை முதல் கூடுதல் விமான சேவை - ஏர் இந்தியா அறிவிப்பு!

கோவையில் இருந்து மும்பைக்கு கூடுதலாக ஒரு ஏர் இந்தியா விமானம் இயக்கப்பட உள்ளது. இந்த சேவையானது நாளை முதல் துவங்கப்பட உள்ள நிலையில், காலை 6.30 மணிக்கு மும்பையில் இருந்து புறப்படும் ஏர் இந்தியா விமானம் காலை 8.20 மணிக்கு கோவை வந்தடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் இருந்து மும்பைக்கு நாளை முதல் கூடுதலாக விமானம் இயக்கப்பட உள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கோவை விமான நிலையத்திற்கு தினமும் 23 உள்ளூர் விமானங்களும், சிங்கப்பூர் மற்றும் சார்ஜாவிற்கு செல்லும் இரண்டு சர்வதேச விமானங்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் தினமும் 8,750 பயணிகள் பயணம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கோவையில் இருந்து மும்பைக்கும், மும்பையில் இருந்து கோவைக்கும் கூடுதலாக விமான சேவை துவங்க உள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி நாளை முதல் கோவையிலிருந்து மும்பைக்கு விமான சேவை துவங்க உள்ளது.

காலை 6.30 மணிக்கு மும்பையில் இருந்து கிளம்பும் ஏர் இந்தியா விமானம் காலை 8.20 மணிக்கு கோவை வந்தடையும், மீண்டும் 9.00 மணிக்கு கோவையிலிருந்து கிளம்பி 11 மணி அளவில் மும்பை சென்றடையும்.

ஏற்கனவே கோவை மும்பை இடையே இன்டிகோ, விஸ்டாரா என மூன்று விமானங்கள் சேவை இருந்து வரும் நிலையில், தற்போது கூடுதலாக விமான சேவை துவங்க உள்ளது. கோவையிலிருந்து வியாபார ரீதியாகவும், வெளிநாடு மருத்துவத்திற்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் கூடுதல் விமான சேவை துவங்கப்பட உள்ளது.

இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...