கோவையில் வடக்கு மண்டல சாலை பணிகளுக்காக தனியார் நிறுவனங்கள் சார்பில் ரூ.8.80 லட்சம் வழங்கல்!

கோவை வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.27க்கு உட்பட்ட பாரதி காலனி பகுதியில்‌ நமக்கு நாமே திட்டத்தின் கீழ்‌, தனியார்‌ பங்களிப்புடன்‌ சமூக பொறுப்பு நிதியின் மூலம்‌ (CSR) 4 சாலைப்பணிகள்‌ மேற்கொள்வதற்காக தனியார்‌ நிறுவனத்தினர்‌ சார்பில் கோவை‌ மாநகராட்சி ஆணையர்‌ பிரதாப்பிடம் ரூ.8.80 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.


கோவை: கோவை வடக்கு மண்டலத்தில் தனியார் பங்களிப்புடன் 4 சாலைகள் அமைக்கும் பணிக்காக தனியார் நிறுவனங்கள் சார்பில் 8.80 லட்சம் ரூபாய் மாநகராட்சி ஆணையர் பிரதாப்பிடம் வழங்கப்பட்டது.

நமக்கு நாமே திட்டத்தின் கீழ்‌ கோவை மாநகராட்சியின் வடக்கு மண்டலம் வார்டு எண்‌.27-க்குட்பட்ட பாரதி காலனி பகுதியில்‌ தனியார்‌ பங்களிப்புடன்‌ சமூக பொறுப்பு நிதியின் மூலம் ‌(CSR) 4 சாலைப்பணிகள்‌ மேற்கொள்ளப்பட உள்ளன.



இதற்காக AMERITORE INFRA PVT LTD சார்பில் ரூ.1.65 லட்சம், TEX-TECH INDUSTRIES PVT LTD சார்பில் ரூ.1.65 லட்சம் மற்றும் SRI VENKATESWARA CARBONIC GASES PVT LTD சார்பில் ரூ.2.50 லட்சம் மற்றும் AATHAVA GARMENTS INDIA PVT LTD சார்பில் ரூ.3 லட்சம் என மொத்தம் ரூ.8.80 லட்சம்‌ வழங்கப்பட்டது.



கோவை மாநகராட்சியின் பிரதான அலுவலகத்தில், மாநகராட்சி ஆணையர் பிரதாப்பிடம், ரூ.8.80 லட்சம் மதிப்பிலான காசோலை தனியார் நிறுவனங்கள் சார்பில் வழங்கப்பட்டது.



இந்த நிகழ்வின் போது 27வது வார்டு மாமன்ற உறுப்பினர்‌ அம்பிகா தனபால்‌ மற்றும்‌ தனியார்‌ நிறுவனத்தினர்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...