கோவை அருகே கனமழையால் உடைந்த தரைப்பாலம் - வெள்ளத்தில் சிக்கிய இளைஞர் மீட்பு!

கோவை மதுக்கரை சுற்றுவட்டார பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழையால், மஞ்சப்பள்ளம் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த தரைபாலம் உடைந்தது. அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர் வெள்ளத்தில் சிக்கித் தவித்த நிலையில், ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு மீட்கப்பட்டார்.



கோவை: கோவையில் கடந்த நான்கு நாட்களாக மாலை நேரங்களில் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், நேற்றிரவும் கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை நேரங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதில் சுந்தராபுரம், மாச்சம்பாளையம், பிள்ளையார்புரம், மதுக்கரை பகுதியில் பெய்த தொடர் கனமழையால், மதுக்கரை, வேலந்தாவளம் வழியாக கேரளா செல்லும் மஞ்சப்பள்ளம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.



இதனால், மதுக்கரை ஆற்று விநாயகர் கோவில் அருகே ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள தரைப்பாலத்திற்கு 4 அடிக்கு மேல் வெள்ள நீர் சென்ற நிலையில், தரைபாலத்தின் ஒரு பகுதியில் உடைப்பு ஏற்பட்டு, வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.



அப்போது, அவ்வழியாக பணிக்குச் சென்றுவிட்டு இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிய வீரப்பனூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் வண்டியுடன் வெள்ள நீரில் சிக்கினார்.



இதையடுத்து ஊர் பொதுமக்கள் ஒன்று கூடி கயிறு கட்டி 1 மணி நேரத்திற்குமேல் போராடி இளைஞரை மீட்டனர். மேலும் தரைப்பாலத்தில் உடைப்பு ஏற்பட்டதால் அவ்வழியாக முழுமையாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது.

தொடர் கனமழையால் மதுக்கரை பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும் மழை நீர் புகுந்து அப்பகுதியே வெள்ளக்காடாக காட்சியளிப்பதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...