கனமழை, வெள்ளப்பெருக்கால் மதுக்கரை தரைப்பாலத்தில் உடைப்பு - நகராட்சி தலைவர் நேரில் ஆய்வு!

கோவை மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக மஞ்சப்பள்ளம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், மதுக்கரை தரைப்பாலத்தில் உடைப்பு ஏற்பட்டது. இங்கு மதுக்கரை நகராட்சி தலைவர் நூர்ஜகான் நாசர் நேரில் ஆய்வு மேற்கொண்டு, சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.


கோவை: கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், மதுக்கரை தரைப்பாலம் உடைந்து வெளியேறிய நீரில் சாலை முழுவதுமாக சேதமடைந்து நீரில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மதுக்கரை சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த தொடர் கனமழையால் மஞ்சப்பள்ளம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில், மதுக்கரை ஆற்று விநாயகர் கோவில் அருகே இருந்த தரைப்பாலம் வெள்ள நீரில் மூழ்கியது.



இதனை தொடர்ந்து தரைப்பாலத்தில் உடைப்பு ஏற்பட்டதால், மதுக்கரை - குரும்பபாளையம் இடையே செல்லும் தார் சாலை முழுமையாக சேதமடைந்து நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளது. மேலும், மதுக்கரை சாலையில் உள்ள மின்கம்பமும் சாய்ந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020ல் 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட தரைப்பாலத்தை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார். ஆனால் தரைப்பாலத்தின் கீழ் நீர் செல்ல போதிய வழியை ஏற்படுத்தாமல் அவசரகதியில் பணிகள் முடிக்கப்பட்டதே வெள்ள நீர் வெளியேறி பாலம் உடைவதற்கு காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.



இந்நிலையில் மதுக்கரை தரைப்பாலம் மற்றும் சாலை அடித்து செல்லப்பட்ட பகுதியில் மதுக்கரை நகராட்சி தலைவர் நூர்ஜகான் நாசர், கவுன்சிலர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டு, சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...