தாளியூர் மாகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா - குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

துடியலூர் அடுத்த தாளியூரில் உள்ள மாகாளியம்மன் கோயிலில் குண்டம் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்ற நிலையில், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமான பக்தர்கள் குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடனை செலுத்தினர்.


கோவை: துடியலூர் அருகேயுள்ள தாளியூர் மாகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

துடியலூர் அடுத்துள்ள பன்னிமடை ஊராட்சிக்குட்பட்ட தாளியூரில் அருள்மிகு மாகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் குண்டம் திருவிழா கடந்த 18ம் தேதி வாஸ்து பூஜையுடன் தொடங்கியது.

தொடக்க விழாவில் கணபதி ஹோமம், பூச்சாட்டுதல், கொடி ஏற்றுதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து பொன்னூத்து, அனுவாவி, மருதமலை ஆகிய திருக்கோயில்களில் இருந்து புனித நீர் கொண்டு வருதல், சக்தி கரகம் ஊர்வலம், அம்மனுக்கு திருக்கல்யாணம், அம்மனுக்கு வாஸ்து, புஷ்ப மற்றும் மலர் அலங்கார பூஜைகள், விளக்கு பூஜை நடைபெற்றன.

தொடர்ந்து நேற்றைய தினம் குண்டம் கண் திறப்பு, கரும்பு வெட்டுதல், வாண வேடிக்கை உள்ளிட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. அதனையடுத்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் திருவிழா இன்று காலை 6 மணிக்கு தொடங்கியது.

இதில் அம்மனுக்கு வெண்ணைய் சாற்றி, உருகி வழிந்ததும், பூச்செண்டை குண்டத்தில் உருட்டி, பூசாரி, சக்தி கரகம், துணை கரகங்கள், அணிக்கூடை, வேல் ஏந்திய பக்தர்கள், ஊர் பெரியவர்கள், பூக்குண்டத்தில் முதலில் இறங்கினர்.



தொடர்ந்து ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைத்து பக்தர்களும் ஒருவர் பின் ஒருவராக பூ குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடனை செலுத்தினர்.



அப்போது பக்தர்கள் ஓம் சக்தி, பரா சக்தி என கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...