பல்லடம் அருகே பங்காளி சண்டையில் 36 பனை மரங்கள் இரவோடு இரவாக தோண்டி வீசப்பட்ட அவலம்!

பல்லடம் அருகே கள்ளம்பாளையத்தில் பங்காளி சண்டையில் எந்தவித அனுமதியும் இன்றி 36 பனை மரங்கள் இரவோடு இரவாக வேரோடு தோண்டு வீசப்பட்டுள்ளன. பனை மரங்களை வேரோடு தோண்டி வீசிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி பாதிக்கப்பட்ட விவசாயி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.


திருப்பூர்: பல்லடம் அருகே பனைமரங்கள் வேரோடு பிடுங்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட 1வது வார்டு கள்ளம்பாளையத்தை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி என்பவரது மனைவி மரகதம். மரகதத்தின் பெயரில் நாலரை ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. மரகதத்தின் மகன் வடிவேல் இந்த நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இதில் சுமார் 80 ஆண்டுகள் பழமை வாய்ந்த 40 பனை மரங்களையும் வளர்த்து வருகிறார்.

இந்நிலையில் மரகதத்திற்கு சொந்தமான நிலத்திற்கு நடுவே அருகில் உள்ள அவரது அண்ணன் ஆறுமுகம் மற்றும் அவரது மகன்கள் பயன்படுத்தக்கூடிய பொது வழித்தடம் அமைந்துள்ளது.



இந்த பொது வழித்தடத்தை அகலப்படுத்துவதற்காக ஆறுமுகம் மற்றும் அவரது மகன்கள் சிவசங்கர் சுப்பிரமணி மற்றும் யுவராஜ் ஆகிய நான்கு பேரும் சேர்ந்து நேற்று இரவு 11 மணி அளவில் ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு 80 ஆண்டுகள் பழமையான 36 பனை மரங்களையும் வேரோடு தோண்டி வீசி உள்ளனர்.



தனது வீட்டில் இருந்து தோட்டத்திற்குச் சென்ற வடிவேல் பனை மரங்கள் முழுவதுமாக வேரோடு தோண்டி வீசப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து ஆறுமுகம் மற்றும் அவரது மகன்களிடம் கேட்டபோது நாங்கள் அப்படித்தான் செய்வோம் நீ எங்கு வேண்டுமானாலும் புகார் கொடு எனப் பேசியதாக கூறப்படுகிறது.



இதுகுறித்து பல்லடம் காவல் நிலையத்தில் வடிவேல் புகார் அளித்துள்ளார். மேலும் மூன்று தலைமுறைகளாக வளர்த்து வந்த பனை மரத்தை இரவோடு இரவாக வேரோடு தோண்டி வீசி உள்ளனர் எனவும், பனை மரங்களை சேதப்படுத்தியவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பனை மரங்களை வளர்க்கவும் பாதுகாக்கவும் தமிழக அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில் இரவோடு இரவாக 36 பனை மரங்கள் தோண்டி வீசப்பட்ட சம்பவம் பல்லடத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விவசாயி வடிவேல் அளித்த புகாரின் அடிப்படையில் பல்லடம் காவல்துறையினர் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...