கோவை அருகே கருமத்தம்பட்டியில் கஞ்சா விற்பனை - 2 பேர் கைது

கோவை அருகேயுள்ள கருத்தம்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த அகிலன், விஜய் என இருவரை கைது செய்து, அவர்களிடம் இருந்து 1.200 கிலோ கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.


கோவை: கருத்தம்பட்டியில் கஞ்சா விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காவல்துறையினர் வினோபா நகர் பாலம் அருகே சோதனை மேற்கொண்டனர்.

அப்போது கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த கோவை தெலுங்குபாளையம் பகுதியை சேர்ந்த அகிலன்(24) மற்றும் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த விஜய் (51) ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து 1.200 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்து, இருவரையும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...