தாராபுரத்தில் காடு ஹனுமந்தராயர் சுவாமி கோவில் தேர்திருவிழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

தாராபுரத்தில் காடு ஹனுமந்தராயர் சுவாமி கோவில் தேரோட்டம் காலை 9 மணிக்கு தொடங்கியது. பக்தர்கள் கலந்துகொண்டு, பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.முக்கிய வீதிகளின் வழியாக சென்ற தேர் கல்யாணராமர் கோவில் வீதியில் பகல் 12 மணிக்கு நிலைநிறுத்தப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள காடு அனுமந்தராய சாமி கோவில் பகுதி 700 ஆண்டுகளுக்கு முன் வனப்பகுதியாக இருந்தது.

அப்போது, தாராபுரத்தில் வியாசராயர் சாமிகள் இந்தியா முழுவதும் 732 ஆஞ்ச நேயமூர்த்திகளை பிரதிஷ்டை செய்து இருந்தார். அதில் 89-வது மூர்த்தியே தாராபுரம் ஆஞ்சநேயர்.



பொதுவாக சீதா, ராமர் கோவில்களில் மூலமூர்த்தியாக சீதா, ராமர் இருக்க உற்சவமூர்த்தியாக ஆஞ்சநேயர் இருப்பது வழக்கம். ஆனால், தாராபுரத்தில் 7 அடி உயரத்தில் மூலமூர்த்தியாக ஆஞ்சநேயர் வீற்றிருக்க உற்சவ மூர்த்திகளாக சீதா, ராமர் வீற்றிருப்பது தாராபுரம் ஆஞ்சநேயர் கோவிலின் தனி சிறப்பாகும்.



ஆஞ்சநேயர் வாயு என்ற காற்றின் வடிவில் இங்கு அருள்பாலிப்பதாக ஐதீகம். இதன் காரணமாக மூலஸ்தானத்தின் மேற்கூரையில் எப்போதும் காற்று உள்ளே நுழைந்து வெளியே செல்லும் வகையில் திறந்த நிலையிலேயே கோவில் இருப்பது இங்கு மட்டுமே.

இக்கோவிலில் அங்கப்பிரதட்சணம் செய்து துளசி மாலை சாத்தி ஆஞ்சநேயப்பெருமானை உள்ளம் உருக வேண்டிக்கொண்டால் திருமணத்தடை உள்ளவர்களுக்கு விரைவில் திருமணமாகும் என்பது நம்பிக்கை.



தீராத உடல் பிணிகள் எதுவாக இருந்தாலும் அது குணமாகும் என்பதும் தனிச்சிறப்பு. இந்த கோவில் தேரோட்டம் காலை 9 மணிக்கு தொடங்கியது. இதில் சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

முக்கிய வீதிகளின் வழியாக சென்ற தேர் கல்யாணராமர் கோவில் வீதியில் பகல் 12 மணிக்கு நிலைநிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...