திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் பெண் விபரீத முயற்சி - கணவர் மீது போலீசார் பொய் வழக்குப்போட முயற்சிப்பதாக புகார்

திருப்பூரில் கணவர் மீது பொய்யாக கொலை முயற்சி வழக்குப் போட போலீசார் முயற்சிப்பதாகக் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செண்டிலா என்ற பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வழக்கம்போல பரபரப்பாக இன்று காலை இயங்கிக் கொண்டிருந்தது.

இந்த நிலையில், குழந்தைகளுடன் ஒரு பெண் அங்கும் இங்குமாக சென்று கொண்டிருந்தார். ஆட்சியர் அலுவலக இரண்டாவது தளத்திற்கு சென்ற அந்த பெண், திடீரென தனது கையை பிளேடால் அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.



இதனைப் பார்த்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கூச்சலிட்டனர். தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணிக்கு நின்ற போலீசார் அந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தற்கொலைக்கு முயன்ற காரணம் குறித்து பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில், அந்தப் பெண் பெயர் செண்டிலா (வயது35) என்பதும், திருப்பூர் சந்திராபுரம் பகுதியில் வசித்து வசித்து வருவதும் தெரியவந்தது.

மேலும், தனது கணவர் லட்சுமணன் மீது நல்லூர் போலீசார் கொலை முயற்சி வழக்கு பொய்யாக போடுவதற்கு முயற்சி செய்து வருவதாகவும், கணவர் மீது பொய் வழக்கு போடுவதை கண்டித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் அவர் போலீசாரிடம் தெரிவித்தார். ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...