கோவையில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான கூட்டம் - மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு!

கோவை நிர்மலா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பள்ளிக் கல்வித்துறை மற்றும் முன்னோடி வங்கியின் சார்பில் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான கூட்டம், மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தலைமையில் நடைபெற்றது.


கோவை: கோவை நிர்மலா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான கூட்டம், மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

கோவை நிர்மலா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பள்ளிக் கல்வித்துறை மற்றும் முன்னோடி வங்கியின் சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல் மற்றும் கல்விக் கடன் பெறுதல், வழிகாட்டுதல் குறித்த அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தலைமையில் நடைபெற்றது.



இக்கூட்டத்தில் மாவட்ட இடைநிலை கல்வி அலுவலர் பாண்டிய ராஜன், முன்னாள் முன்னோடி வங்கி மேலாளர் வணங்காமுடி, நிர்மலா கல்லூரி முதல்வர் ஜி.எஸ்.மேரி பாபிலோ அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கலந்து கொண்டனர்.



இந்நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர், இளைஞர்களை படிப்பில் மட்டுமல்லாது அனைத்து நிலைகளிலும் வெற்றியாளர்களாக திகழச்செய்யும் வகையில் திறன் மேம்பாடு மற்றும் வழிகாட்டுதல் திட்டமாக நான் முதல்வன்" திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இளைஞர்களை கல்வி, சிந்தனை, மொழி ஆற்றல் மற்றும் பன்முகத் திறமையினை மேம்படச் செய்வதே நான் முதல்வன் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.



மேலும், கோவை மாவட்டத்தில் பல்வேறு வகையான திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது எனவும் சமூகத்தில் அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அடுத்து என்ன படிக்கவேண்டும்? எங்கு படிக்க வேண்டும்? அதற்கான திறமைகள் மேம்படுத்துவதற்கு தேவையான வழிகாட்டுதல்களை மாணவர்களுக்கு இந்த திட்டத்தின் வாயிலாக வழங்க வேண்டும்.

இந்த பயிற்சி வகுப்பினை தலைமையாசிரியர்கள் சிறப்பாக பயன்படுத்தி நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்கள் பயன்பெறும் வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் எனத் தெரிவித்தார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...