மூன்றாம் தர அரசியல் செய்ய வேண்டாம்..! - ஆளுநருக்கு சபாநாயகர் அப்பாவு கோரிக்கை

இந்தியாவில் சட்டத்தின் ஆட்சிதான் நடக்கிறது. மதசார்பற்ற நாடு என்பதை மதசார்புள்ள நாடுதான் என்பதை ஆளுநர்கள் பேசுவது, அரசியல் தலைவர்கள்போல் ஆளுங்கட்சிக்கு எதிராக தொடர்ந்து கருத்துக்களை பரப்பி வருவதும், மாடல் அழிந்துவிட்டது என்பதுபோல செல்வதும் சரியாக இல்லை என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.



கோவை: கோவை மாவட்டம் சூலூரில் வர்த்தக சங்கம் சார்பில் இரண்டாம் ஆண்டு நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில் சிறப்பு விருந்தினராக சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அப்போது சபாநாயகர் அப்பாவு பேசியதாவது:



கோவை மாவட்ட வணிகர் சங்க மாநாட்டிற்கு வருகை தந்தது மகிழ்ச்சியாக உள்ளது. அரசு வர்த்தகர்களை அழைத்து பேசி, நிதிநிலை அறிக்கை தயார் செய்து அதன்படி அவர்களுக்கு உதவி செய்து வருகிறது.

ஏற்கனவே வேளாண்மைக்கு செஸ்வரி போட்டு திரும்ப பெறப்பட்டது. 10 சதவீதம் மின் கட்டண சலுகை வழங்கியதும் இந்த அரசுதான். ஒரு லட்சம் ரூபாயாக இருந்த இழப்பீட்டுத் தொகையை மூன்று லட்சம் ரூபாயாக உயர்த்தியது திமுக அரசுதான்.

ஆளுநர்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி பணியாற்ற வேண்டியவர்கள். அதிலிருந்து தவறாமல் பணியாற்றினால் நன்றாக இருக்கும். மதசார்பற்ற நாடு இந்தியா. இந்தியாவில் சட்டத்தின் ஆட்சிதான் நடைபெறுகிறது. மதசார்பற்ற நாடு என்பதை மதசார்புள்ள நாடுதான் என்பதை ஆளுநர்கள் பேசுவது, அரசியல் தலைவர்கள்போல் ஆளுங்கட்சிக்கு எதிராக தொடர்ந்து கருத்துக்களை பரப்பி வருவதும், மாடல் அழிந்துவிட்டது என்பதுபோல செல்வதும் சரியாக இல்லை.

இந்தியாவில் மக்களாட்சி தத்துவம்தான் சிறந்தது. அரசியலமைப்புச் சட்டம்தான் சிறந்தது. மக்களாட்சி சட்டம்தான் நடைபெறுகிறது. இதனைத் தெரிந்து சொல்கிறார்களா? தெரியாமல் சொல்கிறார்களா? என்று தெரியவில்லை.

வெடிவிபத்து தொடர்பாக விரைவான நடவடிக்கை தமிழக அரசு எடுத்தது. இது தொடர்பாக உள்துறை மற்றும் பிரதமர், குடியரசு தலைவர்களை சந்தித்து புகார் தெரிவிக்காமல் நான்காம்தர அரசியலை ஆளுநர் செய்கிறார். சட்டத்துக்கு புறம்பாக பேசி மூன்றாம் தர அரசியல் ஆளுநர் செய்ய வேண்டாம்.

இந்தியாவில் ஓபிசிக்கு கொடுக்கக்கூடிய மருத்துவ படிப்பில், இட ஒதுக்கீடு இந்தியாவிற்கு பெற்றுத் தந்தது திராவிட அரசுதான். ஆளுங்கட்சியைவிட எதிர்க்கட்சி இருந்தால் அதிக அளவில் வாய்ப்பு கொடுக்கிறோம். தமிழ்நாட்டில் மட்டும் இருந்த திராவிட மாடல் இந்தியா முழுவதும் சென்று உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...