பொள்ளாச்சி அருகே தனியார் பள்ளி ஆசிரியை தற்கொலை!

பொள்ளாச்சி அருகே உள்ள கருமாபுரம்புதூரை சேர்ந்தவர் ஆனந்தகுமார். இவரது மனைவி சோபனா (33). தனியார் பள்ளி ஆசிரியையான இவர் குடும்ப தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நெகமம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே தனியார் பள்ளி ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கருமாபுரம்புதூரை சேர்ந்தவர் ஆனந்தகுமார். இவரது மனைவி சோபனா (33). தனியார் பள்ளி ஆசிரியை. இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

ஒரு பெண் குழந்தை உள்ளது. சோபனாவுக்கு அவரது கணவரின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று மீண்டும் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இதனால் விரக்தி அடைந்த சோபனா வீட்டில் உள்ள அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து நெகமம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் சோபனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமான 4 வருடத்தில் சோபனா தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...