மாட்டுக்கான போராட்டம் மண்ணுக்காகவும் தொடர்கிறது: ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக கோவையில் இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்



புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையை சேர்ந்த இளைஞர்கள் நீதிமன்றம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜல்லிக்கட்டு வேண்டி ஒட்டுமொத்த தமிழர்கள் ஒன்றுதிரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதில் வெற்றியும் கண்டனர். இளைஞர்களின் அறப்போராட்டத்திற்கு உலகம் முழுவதிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்தன.

இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு எதிர்ப்புகள் வலுத்து வருகிறது. நெடுவாசல் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். நெடுவாசல் பகுதி மக்களுக்கும், விவசாயிகளுக்கும் ஆதரவாக தற்போது இளைஞர்களும், மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ந்து, இளைஞர்களின் இந்த போராட்டம் அண்டை மாவட்டங்களுக்கும் பரவி வருகிறது. 



இன்று காலை, கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு திரண்ட இளைஞர்கள் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மேலும், மாட்டுக்காக வந்த நாங்கள், தமிழகத்தின் மண்ணை காக்கவும் வருவோம் என்றும் கோஷம் எழுப்பினர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 26 பேரை போலீசார் கைது செய்தனர்.



Newsletter

திருப்பூரில் டியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போல...

மின்கம்பி விழுந்து சோலார் மின்வேலியில் மின்சாரம் பாய்ந்து பெண் விவசாயி பரிதாபமாக உயிரிழப்பு

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் நாயக்கன்பாளையம் ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் அறுந்து விழுந்த மின்கம்பி சோலார்...

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...