கோவை ரேஸ்கோர்சில் நடைபயிற்சி செல்வோர் அவசர உதவிக்கு குறைதீர் போலீசார் நியமனம்!

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்களுக்கு ஏதேனும் அவசர உதவிகள் தேவைப்பட்டால் அவற்றை உடனடியாக தெரிவிக்க வசதியாக கோவை மாநகர காவல்துறை சார்பில் தினசரி மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை குறைதீர் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.


கோவை: ரேஸ்கோர்சில் நடைப்பயிற்சி செல்லும் மக்கள் குறைகளை தெரிவிக்க போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். மேலும், நடைபயிற்சி மேற்கொள்வதற்காக பல்வேறு பகுதிகளிலிருந்து தினமும் நூற்றுக்கணக்கானோர் ரேஸ்கோர்ஸ் பகுதிக்கு வந்து செல்கின்றனர்.

அவ்வாறு வரும் பொதுமக்களுக்கு ஏதேனும் அவசர உதவிகள் தேவைப்பட்டால் அவற்றை உடனடியாகத் தெரிவிக்க வசதியாக நடைபாதையை ஒட்டிய பூங்கா நுழைவாயில் அருகே அமர்ந்து பணியாற்றும் வகையில் ஒரு ஆண், ஒரு பெண் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கோவை மாநகர காவல்துறை சார்பில் நியமிக்கப்பட்டுள்ள இந்த காவலர்கள், தினசரி மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை குறைதீர் பணியில் இருப்பார்கள். இவர்களிடம் சட்டம் ஒழுங்கு, குற்றம், சுகாதாரம், மின்வாரியம் உள்பட அனைத்து வித துறைகள் சார்ந்த பிரச்னைகளையும் பொதுமக்கள் தெரிவிக்கலாம். இதை பதிவு செய்து கொள்ளும் அங்குள்ள போலீசார், சம்பந்தப்பட்ட துறையினருக்கு தகவல் அளிப்பார்கள்.

அவர்கள் குறைகளின் மீது நடவடிக்கை எடுப்பர். இதற்காக துறை சார்ந்த அலுவலர்கள் போலீசாருடன் தொடர்பில் இருப்பர். இதன் மூலம் மக்களின் பிரச்னைகளைத் தீர்க்கும் வகையில் புது முயற்சி எடுக்கப்பட்டுள்ளது என்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...