வால்பாறையில் காட்டு யானைகள் 3வது நாளாக நடமாட்டம் - வனத்துறை நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

கோவை மாவட்டம் வால்பாறை அருகே மூன்றாவது நாளாக உலாவரும் காட்டு யானைகள் அங்குள்ள கோவில், குழந்தைகள் காப்பகம் போன்றவைகளை உடைத்து சேதப்படுத்தியதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். குடியிருப்புப் பகுதியில் உலாவரும் யானைகளை விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதியில் நுழைந்து, வீடுகள், மளிகை கடைகள், ரேஷன் கடைகள், போன்றவைகளை உடைத்து உள்ளிருக்கும் உணவுப் பொருட்களை சாப்பிட்டு செல்கிறது. இதனால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.யானைகள் மனித மோதலை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



இந்நிலையில், வால்பாறை அருகே பண்ணிமேடு எஸ்டேட் பகுதிகளில் 7 காட்டு யானைகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக அப்பகுதியில் உள்ள கோவில், குழந்தைகள் காப்பகம் ஆகிய கட்டிடங்களை இடித்து சேதப்படுத்தியது. யானைகள் நடமாட்டம் கண்டறிந்து வனத்துறையினர் யானைகளை வன பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



இதனிடையே வால்பாறைக்கு வந்த சட்டமன்ற உறுப்பினர் அமுல்கந்தசாமி, யானைகள் கோவிலை உடைத்ததை அறிந்து அப்பகுதிக்குவந்து மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.வனத்துறையினரிடம் வன பகுதிகளில் இருந்து வெளியேறும் காட்டு யானைகளை குடியிருப்பு பகுதிக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

மேலும், இது குறித்து சட்டசபையில்பேசி குடியிருப்பு பகுதிகளை சுற்றி மின் வேலி, அகழி போன்றவைகளை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் அவர் தெரிவித்து சென்றார்.

யானைகள் நடமாட்டம்இருப்பதால் மக்கள் வனப்பகுதிக்குள் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...