கனிமவளக் கொள்ளையை தடுத்திடுக..! ஜல்லி,மணலுடன் மனு அளித்த மறுமலர்ச்சி மக்கள் இயக்கம்

கோவையில் கனிம வளக்கொள்ளையை தடுக்க வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் ஜல்லி, மணல் ஆகியவற்றுடன் சென்று கோரிக்கை மனு அளித்தனர்.


கோவை திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து கேரளாவிற்கு அதிகப்படியான கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதாகவும், கோவை மாவட்டத்தில் பல்வேறு கல்குவாரிகள் அனுமதியின்றி செயல்படுவதாகவும் கூறி பல்வேறு கட்சியினர், விவசாய சங்கங்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.



அதன் தொடர்ச்சியாக, மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பிலும் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர்.



இந்நிலையில், கனிம வளக் கொள்ளையை தடுக்க வலியுறுத்தி மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் தலைவர் வே.ஈஸ்வரன் தலைமையிலான நிர்வாகிகள், கோவைமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர்.



அப்போது, அவர்கள் ஜல்லி மணல் உள்ளிட்ட கனிமங்களையும் எடுத்து வந்து அவர்களது கோரிக்கையை வலியுறுத்தினர்.

மேலும் கனிம வளங்கள் வெட்டி எடுத்து செல்லப்படுவது தொடர்ந்தால், கோவை மக்கள்தான் வருங்காலங்களில் பாதிக்கப்படுவார்கள் எனவும், கனிம வள கொள்ளையால் ஒரு குறிப்பிட்ட நபர்களுக்கு செல்லும் பணம், அரசுக்குக் கிடைத்தால் தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை கொண்டு வந்துவிடலாம் எனவும், மதுவில் வரும் வருமானத்தைவிட அதிக அளவு வருமானம் கனிம வளத்தில் கிடைக்கிறது எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...