கோவையில் பல்வேறு குற்றச்சம்பவங்களில் தொடர்புடைய தாதாவுக்கு வலைவீச்சு - மும்பையில் முகாமிட்டுள்ள தனிப்படை!

கோவையில் கொலை மற்றும் கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு அடைக்கலம் தருவது, ஜாமீனில் எடுப்பது போன்ற உதவிகளை செய்து வந்த பிரபல தாதா தில்லி என்பவரை பிடிக்க தனிப்படை போலீசார் மும்பையில் முகாமிட்டு தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.


கோவை: கோவையில் பல்வேறு குற்றச்சம்பவங்களின் பின்னணியில் இருப்பதாக கருதப்படும் தாதாவை தேடி கோவை தனிப்படை போலீசார் மும்பையில் முகாமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் சில மாதங்களுக்கு முன்பு அடுத்தடுத்து இரண்டு படுகொலை சம்பவங்கள் நடைபெற்றன. இதில் ரவுடி கோஷ்டிகளுக்கும், கஞ்சா விற்பனையாளர்களும் சம்பந்தப்பட்டிருப்பதை கண்டறிந்த போலீசார் அவர்களை ஒடுக்கும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் காரணமாகமாநகரில் வெவ்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை செய்தவர்கள், தொடர்ந்து குற்றங்கள் ஈடுபடுவோர் என 600க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைதான குற்றவாளிகள் பலரது பின்னணியில் தில்லி என்ற மர்ம நபர் இருப்பது, போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கேரளாவை சேர்ந்த இந்த நபர் கொலை செய்யும் ரவுடிகள், கஞ்சா விற்பனை செய்பவருக்கு பின்புலமாக இருந்து பண உதவி செய்து, தன் வளையத்திற்குள் வைத்துக் கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார் என்பதை போலீசார் கண்டறிந்துள்ளனர்.

கொலை செய்துவிட்டு தப்பித்து செல்லும் ரவுடிகளுக்கு அடைக்கலம் தருவது அவர்கள் கைது செய்யப்பட்டால் வக்கீல் மூலம் ஜாமீன் எடுப்பது போன்ற வேலைகளையும் அந்த நபர் செய்து கொடுத்திருக்கிறார். ஆனால் அந்த நபர் இதுவரை போலீசில் பிடிபடவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், தில்லி என்ற அந்த நபரை கைது செய்ய திட்டமிட்டகோவை தனிப்படை போலீசார் சென்னை, மும்பை நகரங்களில் முகாமிட்டு தீவிரமாக தேடி வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

Tragedy in Tiruppur: Conductor Sleeping in Front of Bus Run Over, Killed

A 23-year-old bus conductor was killed in a tragic accident in Tiruppur after a private bus driver allegedly failed to n...

திருப்பூரில் பரிதாபம்: பேருந்து முன்பாக படுத்திருந்ததை கவனிக்காத ஓட்டுனர் – நடத்துனர் பலி.

திருப்பூரில் பேருந்தின் முன்பாக படுத்து உறங்கியிருந்த இளம் நடத்துனர் சூர்யா (23) மீது, ஓட்டுனர் கவனிக்காமல் பேருந்தை இயக...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்த ஒன்றிய அரசு - நீட் தேர்வு ரத்து கோரி பல்சமய நல்லுறவு இயக்கம் வலியுறுத்தல்

கோயம்புத்தூரில் பல்சமய நல்லுறவு இயக்கம் நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து, வட மாநிலங்களில் வினாத்தாள் கசிவு ம...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்த ஒன்றிய அரசு - முறைகேடுகளுடன் நடக்கும் NEET தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்

NEET தேர்வில் தொடர் முறைகேடுகள் நடந்து வருவதாக குற்றம்சாட்டி, பல்சமய நல்லுறவு இயக்கம் உடனடியாக தேர்வை ரத்து செய்ய வேண்டு...

AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வி.பி.கந்தவேல் கட்சியிலிருந்து ராஜினாமா

கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வி.பி.கந்தவேல், கட்சியின் தற்போதைய நிகழ்வுகளால் மன...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...