கோவையில் பல்வேறு குற்றச்சம்பவங்களில் தொடர்புடைய தாதாவுக்கு வலைவீச்சு - மும்பையில் முகாமிட்டுள்ள தனிப்படை!

கோவையில் கொலை மற்றும் கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு அடைக்கலம் தருவது, ஜாமீனில் எடுப்பது போன்ற உதவிகளை செய்து வந்த பிரபல தாதா தில்லி என்பவரை பிடிக்க தனிப்படை போலீசார் மும்பையில் முகாமிட்டு தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.


கோவை: கோவையில் பல்வேறு குற்றச்சம்பவங்களின் பின்னணியில் இருப்பதாக கருதப்படும் தாதாவை தேடி கோவை தனிப்படை போலீசார் மும்பையில் முகாமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் சில மாதங்களுக்கு முன்பு அடுத்தடுத்து இரண்டு படுகொலை சம்பவங்கள் நடைபெற்றன. இதில் ரவுடி கோஷ்டிகளுக்கும், கஞ்சா விற்பனையாளர்களும் சம்பந்தப்பட்டிருப்பதை கண்டறிந்த போலீசார் அவர்களை ஒடுக்கும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் காரணமாகமாநகரில் வெவ்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை செய்தவர்கள், தொடர்ந்து குற்றங்கள் ஈடுபடுவோர் என 600க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைதான குற்றவாளிகள் பலரது பின்னணியில் தில்லி என்ற மர்ம நபர் இருப்பது, போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கேரளாவை சேர்ந்த இந்த நபர் கொலை செய்யும் ரவுடிகள், கஞ்சா விற்பனை செய்பவருக்கு பின்புலமாக இருந்து பண உதவி செய்து, தன் வளையத்திற்குள் வைத்துக் கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார் என்பதை போலீசார் கண்டறிந்துள்ளனர்.

கொலை செய்துவிட்டு தப்பித்து செல்லும் ரவுடிகளுக்கு அடைக்கலம் தருவது அவர்கள் கைது செய்யப்பட்டால் வக்கீல் மூலம் ஜாமீன் எடுப்பது போன்ற வேலைகளையும் அந்த நபர் செய்து கொடுத்திருக்கிறார். ஆனால் அந்த நபர் இதுவரை போலீசில் பிடிபடவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், தில்லி என்ற அந்த நபரை கைது செய்ய திட்டமிட்டகோவை தனிப்படை போலீசார் சென்னை, மும்பை நகரங்களில் முகாமிட்டு தீவிரமாக தேடி வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...