திராவிட மாடல் ஆட்சியை கண்டு சிலருக்கு வயிற்று எரிச்சல்..! - கோவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி விமர்சனம்!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் பல்வேறு துறைகள் சார்பில் 980 பேருக்கு ரூ.11.73 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, திராவிட மாடல் ஆட்சியின் 2 ஆண்டு சாதனையான மகளிர் பேருந்து, காலை உணவு திட்டம் நாட்டிற்கே எடுத்துக்காட்டாக உள்ளது என்றார்.


கோவை: திராவிட மாடல் ஆட்சியை கண்டு சிலருக்கு வயிற்றெரிச்சல் ஏற்பட்டுள்ளது என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.



கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கலை அரங்கில் மாவட்ட நிர்வாகம் சார்பில் வருவாய்த்துறை, பள்ளி கல்வித்துறை, தோட்டக்கலைத்துறை, சமூக நலம், கூட்டுறவு துறை, ஆதிதிராவிடர், மின்சாரத்துறை, உணவு பாதுகாப்பு துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் 980 பேருக்கு ரூ.11.73 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.



இந்த நிகழ்வில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, நாடுளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையர் பிரதாப், மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்று திமுக ஆட்சியின் ஈராண்டு சாதனை மலரை வெளியிட்டனர்.



முன்னதாக அனைத்து துறை சார்பில் அமைக்கப்பட்டு இருந்த கண்காட்சியை அமைச்சர் செந்தில் பாலாஜி பார்வையிட்டார். இதனை தொடர்ந்து மேடையில் அமைச்சர் செந்தில்பாலாஜி பேசியதாவது,

2 ஆண்டு காலத்தில் இந்த வார்டில் மட்டும் 3.5 கோடி மதிப்பிலான திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதே போல் கோவை மாநகர பகுதியில் உள்ள ஒவ்வொரு வார்டுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த நிகழ்ச்சியில் 11 கோடியே 73 லட்சம் மதிப்பிலான நல திட்டம் வழங்க உள்ளோம்.

திராவிட மாடல் ஆட்சியில் சிலருக்கு சந்தேகம் வருகிறது. ஒரு சிலருக்கு வயிற்று எரிச்சல் வருகிறது. பெண்கள் காலை உணவு செய்து பணிக்கு போக வேண்டும். இதனால் காலை உணவு திட்டத்தை முதல்வர் வழங்கி உள்ளார். 1.50 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கி உள்ளோம்.

ஐடி நிறுவனம் பெங்களூருவுக்கு சென்று விட கூடாது என கோவைக்கு 9,000 கோடி மதிப்பில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. 200 ஏக்கர் நிலப்பரப்பில் டெக் சிட்டி வர உள்ளது. செம்மொழி பூங்கா வர உள்ளது.

2 ஆண்டு சாதனையை தலைப்பு செய்திகளாக சொல்ல வேண்டும் என்றால், அதில் மகளிர் பேருந்து, காலை உணவு திட்டம் என உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் இந்தியாவிற்கு எடுத்துக்காட்டாக துவங்கப்பட்டுள்ளது

இவ்வாறு அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

Newsletter

கோவை வடக்கு: அடுக்குமாடி குடியிருப்புகளில் வாக்கு சேகரித்த வானதி சீனிவாசனின் குடும்பத்தார்..!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசனுக்காக, அவரது கணவர் சீனிவாசன் மற்றும் மகன்கள். அடுக்குமாடி குடியிருப...

பொள்ளாச்சி திமுக வேட்பாளருக்கு தேவாங்க செட்டியார் சமூகத்தினர் ஆதரவு..!

வரும் சட்டமன்றத் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதச்சர்பற்ற முற்போக்கு கூட்டணியின்  வேட்பாளர் நித்தியானந்த...

கோவை குமரகுரு நிறுவனத்தில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி

கோவை குமரகுரு கல்வி நிறுவனங்களில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி வாகனம் வருகை தந்தது. 100-க்கும் மேற்பட்ட...

ஏப்ரல் 17: கோவையில் உதயநிதி பிரச்சார அட்டவணை வெளியீடு

2026 தேர்தலை முன்னிட்டு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஏப்ரல் 17ஆம் தேதி காலை முதல் இரவு வரை காங்கேயம், உடுமலைப்பேட்டை,...

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் தேர்தலை முன்னிட்டு மாணவர்களுக்கு தொடர் விடுமுறை அறிவிப்பு

Coimbatore மாணவர்கள் வாக்களிக்க ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் தேர்தல் நாளுக்கு முன்பும் பின்பும்...

மின் கட்டணக் குறைப்பு உள்பட கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: தொழில் துறையினருக்கு அதிமுக வேட்பாளர்கள் உறுதி

கோவையில் தமிழ்நாடு அனைத்து தொழில் முனைவோர் கூட்டமைப்பு ஏற்பாட்டில் புதன்கிழமை நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில், அதிமுக கூ...